சிலம்பரசனின் கடின உழைப்பு

சிலம்பரசனின் கடின உழைப்புக்கு ‘வெந்து தணிந்தது காடு’ படக்குழு புகழாரம் சூட்டியுள்ளது.
கெளதம் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வெந்து தணிந்தது காடு’. வேல்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தில் ராதிகா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் கதையை ஜெயமோகன் எழுதியுள்ளார்.
இதன் முதற்கட்டப் படப்பிடிப்பு திருச்செந்தூரில் தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சென்னையில் அரங்குகள் அமைத்து சில முக்கியக் காட்சிகளைப் படமாக்கினார்கள். தற்போது இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு முடிந்தது என்று ‘வெந்து தணிந்தது காடு’ படக்குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வேல்ஸ் நிறுவனம் தங்ளுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
” ‘வெந்து தணிந்தது காடு’ இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு முடிந்து விரைவில் மும்பையில் 3-ம் கட்டப் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. சண்டைக் காட்சிகளில் சிலம்பரசன் மிகத் தீவிரமான, கடின உழைப்பைக் கொடுத்துள்ளார். பார்வையாளர்களுக்கு விருந்தாக அமையும்”.
இவ்வாறு வேல்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.இந்தப் படத்தின் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான், பாடலாசிரியராக தாமரை ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

Related posts