இறக்கும் வரையில் இனவாதத்திற்கு எதிராக செயற்பட்டவர் மங்கள!

மங்கள சமரவீரவின் எதிர்பாராத மறைவுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பினராகிய நாம் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ம.ஆ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தமழ் தேசிய கூட்டமைப்பின் இரங்கல் செய்தியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

1989 இல் அரசியலில் கால் பதித்த திரு. சமரவீர, 1994 இல் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரஸ்துங்காவின் அரசாங்கத்தில் அமைச்சராக பொறுப்பேற்றார்.

மேலும் தமிழ் தேசிய பிரச்சினைக்கான அரசியல் தீர்வுக்காக பிரச்சாரம் செய்யும் ´சுது நெலும்´ இயக்கத்தினையும் முன்னெடுத்துச் சென்றார். அவர் இறக்கும் வரையிலும் தனது இனவாதத்திற்கு எதிரான நிலைப்பாட்டில் தொடர்ந்திருந்தார்.

திரு. சமரவீர,புலிகளுடனான போர் நடாத்தப்பட்ட முறைக்கு எதிர்ப்பு தெரிவித்த காரணத்தினால் தனது அமைச்சரவை பதவியினை இழக்க நேரிட்டது.

பின்னர் அவர் 2015 இல் வெளிவிவகார அமைச்சராக மீண்டும் பதவியேற்று, ​​நீதி, பொறுப்பு மற்றும் நல்லிணக்கத்தை நோக்கி அயராது உழைத்தார்.

இன, மொழி, சாதி, மதம், அல்லது நம்பிக்கை வேறுபாடுகளாலுக்கப்பால் ஒவ்வொரு குடிமகனும் சமமாக நடத்தப்படும் ஒரு இலங்கையே அவரது தரிசனமாக காணப்பட்டது. மங்கள சமரவீரவின் மரணம் நம் அனைவருக்கும் ஈடுசெய்யமுடிய பாரிய இழப்பாகும்.

Related posts