ஜாதிக ஹெல உருமயவிலிருந்து விலகினார் சம்பிக்க ரணவக

பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக, ஜாதிக ஹெல உருமய கட்சியிலிருந்து விலகியுள்ளார்.
ஜாதிக ஹெல உருமய கட்சியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ள அவர், அக்கட்சியின் உறுப்புரிமையிலிருந்தும் விலகியுள்ளார்.
இலங்கை மன்றத்தில் இடம்பெற்ற ஜாதிக ஹெல உருமயவின் விசேட பிரதிநிதிகள் கூட்டத்தில் அவர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.
புதிய சமூகத்தை கட்டியெழுப்புவதற்காக கட்சியிலிருந்து நீங்குவதாக பாட்டலி சம்பிக்க ரணவக தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து ஜாதிக ஹெல உருமயவின் மத்திய செயற்குழு உறுப்பினர்களும் தமது பதவிகளிலிருந்து விலகியுள்ளனர்.
இதனடிப்படையில், கருணாரத்ன பரணவிதான, நிஷாந்த ஶ்ரீ வர்ணசிங்க, அநுருத்த பிரதீப், மற்றும் நிரோஷா அத்துகோரள ஆகியோர் கட்சியின் செயற்குழுவிலிருந்து விலகியுள்ளனர்.
குறித்த கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த கட்சியின் ஏனைய உறுப்பினர்களின் அனுமதியுடன், ஜாதிக ஹெல உருமயவிற்கு புதிய உறுப்பினர் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

—-

Related posts