முன்னாள் ஜனாதிபதிக்கு புதிய பதவி?

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிர்வரும் அரசியலமைப்பின் ஊடாக பதவி ஒன்று வழங்குவதற்கு இணக்கம் ஏற்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

கட்சி தலைமையகத்தில் நேற்று (20) மாலை இடம்பெற்ற மத்திய செயற்குழு கூட்டத்தை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த அரசியலமைப்பு தொடர்பில் ஆலோசனை வழங்குவதற்காக குழுவொன்றை நியமிக்க இதன்போது தீர்மானிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த குழுவின் தலைவராக அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

சிறீலங்கா சுதந்திர கட்சியையே தொலைத்துவிட்ட மாதனமுத்தா என்று குறை கூறப்படும் மைத்திரிக்கு இப்போது பதவி வழங்கி அதையும் தொலைக்க முயல்கிறது அரசு..!

—–

பாராளுமன்ற நிலையியற் கட்டளை 114 இலக்கத்துக்கு அமைய ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் சேவைக்கான தெரிவுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவை தவிசாளராகவும், அரசியல் கட்சிகளின் தலைவர்களையோ அல்லது அவர்களின் நியமத்தவர்களையோ உள்ளடக்கிய பன்னிரண்டு உறுப்பினர்களைக் கொண்டதாக தெரிவுக்குழு அமைந்துள்ளது.

நிமல் சிறிபால.டி சில்வா, தினேஷ் குணவர்த்தன, ஜோன்ஸ்டன் பெர்னான்டோ, டக்ளஸ் தேவானந்தா, டலஸ் அழகப்பெரும, விமல் வீரவங்ச, பிரசன்ன ரணதுங்க, லக்ஷ்மன் கிரியல்ல, கயந்த கணாதிலக, ரவூப் ஹக்கீம், விஜித ஹேரத், கௌரவ செல்வம் அடைக்கலாதன் ஆகியோர் தெரிவுக் குழுவில் உள்ளடங்குகின்றனர்.

இக்குழுவின் முதலாவது கூட்டம் இன்று பிற்கல் 2 மணிக்கு சபாநாயகர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

Related posts