நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகளால் நாடு சீரழிந்துள்ளது

கடந்த அரசாங்க காலப்பகுதியில் இடைநடுவே நிறுத்தப்பட்டுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மீள ஆரம்பிக்க ஜனாதிபதி பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிக்கு பாராளுமன்ற பெரும்பான்மையை வழங்க வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கம்பஹா திவுலபிட்டி பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனை தெரிவித்தார்.

2005 ஆம் ஆண்டு தொடக்கம் தமது அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் இடைநடுவே நிறுத்தப்பட்டதாகவும் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் 5 வருட காலப்பகுதி வீணடிக்கப்பட்டதாகவும் பிரதமர் இதன்போது தெரிவித்தார்.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகளால் நாடு சீரழிந்துள்ளதாக பிரதமர் மேலும் தெரிவித்தார்.

Related posts