சஹ்ரான் இந்தியாவிற்கு தப்பிச் செல்ல உதவி

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்த திட்டமிட்ட சஹ்ரான் ஹசீம் படகு மூலம் இந்தியாவிற்கு தப்பிச்செல்ல முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியூதீனின் சகோதரன் உதவி புரிந்தாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் தெரியவந்துள்ளது.

ஆணைக்குழுவில் நேற்று (22) சாட்சியமளித்த முன்னாள் புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் ஒருவர் இதனை கூறியுள்ளார்.

இன்று அதிகாலை 1 மணிவரை அவர் ஆணைக்குழு முன் வாக்கு மூலம் வழங்கியதாக அததெரண செய்தியாளர் கூறினார்.

2018 ஆம் ஆண்டு சஹ்ரான் ஹசீம் படகு மூலம் இந்தியாவிற்கு தப்பிச்சென்றுள்ளமை; இதனை கூறியுள்ளார்.

அதற்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் கைதுசெய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியூதீன் சகோதரர் ரிப்கான் பதியூதீன் உதவி புரிந்தாக அவர் கூறினார்.

ரிப்கான் பதியூதீன் ஆட்கடத்தல் வியாபாரம் உள்ளிட்ட பல வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் முன்னாள் புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Related posts