எனது ஊரடங்கு வாழ்க்கை இப்படி தான் உள்ளது – நடிகை தமன்னா

எனது ஊரடங்கு வாழ்க்கை இப்படி தான் உள்ளது என நடிகை தமன்னா நகைச்சுவையாக கூறியுள்ளார்.

தமன்னா 12 வருடங்களாக சினிமாவில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தமிழில் ‘பாகுபலி’, ‘பையா’, ‘அயன்’ உள்ளிட்ட பல்வேறு வெற்றிப்படங்களில் நடித்துள்ள இவர், விக்ரம் நடிப்பில் வெளியான ‘ஸ்கெட்ச்’ படத்திலும் நடித்திருத்திருக்கிறார்.

கொரோனா ஊரடங்கால் அடித்தட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக முடங்கியுள்ளது. ஆனால் இயந்திரம் போல் இயங்கிக் கொண்டிருந்தவர்கள் ஓய்வெடுக்கவும், குடும்பத்துடன் நேரத்தை செலவிடவும், பயனுள்ள விஷயங்களை செய்யவும் இது ஒரு அருமையான வாய்ப்பாக அமைந்திருக்கிறது.

இந்தநிலையில் இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

இதுபோன்றதொரு அருமையான வாய்ப்பு மீண்டும் கிடைக்காது. எனவே இந்த நேரத்தை பயனுள்ள விஷயங்களில் செலவிடு என மனசு சொல்கிறது. இதுபோன்றதொரு அருமையான வாய்ப்பு மீண்டும் கிடைக்காது. எனவே நன்றாக தூங்கி ஓய்வெடு எனவும் தோன்றுகிறது. இப்படி தான் எனது ஊரடங்கு வாழ்க்கை இருக்கிறது என தெரிவித்துள்ளார்.

Related posts