தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய 2.18 லட்சம் பேர் கைது

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய 2.18 லட்சம் பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழகம் உள்பட நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி மக்கள் வாகனங்களில் சென்று வருகின்றனர். அத்தகைய நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. வாகனங்களில் சுற்றினால், அந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதமும் விதிக்கப்படுகிறது.

இந்த நிலையில், 144 தடை உத்தரவை மீறியதாக தமிழகம் முழுவதும் 2 லட்சத்து 18 ஆயிரத்து 533 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். ஊரடங்கு உத்தரவை மீறியதாக 2 லட்சத்து 5 ஆயிரத்து 54 லட்சம் வழக்குகள் இதுவரை பதிவாகியுள்ளன.

தமிழகம் முழுவதும் 1.85 லட்சம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுவரை ரூ.98 லட்சத்து 7 ஆயிரம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை நேற்று முதல் திரும்ப ஒப்படைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

Related posts