யாழ். நகரில் மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ். நகரில் மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். யாழ். நகரில் அமைந்துள்ள கடையொன்றின் ஊழியரான மானிப்பாய், சங்கானையைச் சேர்ந்த 18 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நேற்று (17) பகல் மின் தாக்குதலுக்கு உள்ளான இவர், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். —— மினிப்பே, 05ஆம் கட்டைப் பகுதியில் ஹதகனாவ வட்டமுல்ல பிரதேசத்திலுள்ள வயல்வெளியை அண்டிய பகுதியில் இரு யானைகள் உயிரிழந்துள்ளன. இன்று (18) அதிகாலை கிடைத்த தகவலுக்கு அமைய பொலிஸார் மற்றும் வனஜீவராசி அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். வயல் நிலத்தை சுற்றிவர அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி குறித்த யானைகள் இரண்டும் உயிரிழந்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர். ——- தடைகளை நீக்கி சுதேச கைத்தொழில்துறையையும் மற்றும் முதலீட்டாளர்களையும் ஊக்குவிப்பதற்கு…