தர்பார் 150 கோடி வசூல்.. உண்மையா.. வழமையான செய்தியா..?

150 கோடி ரூபாய் வசூலித்து தர்பார் படம் சாதனை படைத்துள்ளது என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

ரஜினிகாந்த் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் வெளியாகியுள்ள படம் தர்பார். தர்பார் உலகம் முழுவதும் 7000 திரைகளில் வெளியிடப்பட்டு உள்ளது.

ரஜினிகாந்த் காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் இந்தப் படத்தில் நயன்தாரா அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

ரஜினிகாந்தின் தர்பார் உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் நல்ல துவக்கத்தை தந்து உள்ளது. உலக் பாக்ஸ் ஆபீசில் 150 கோடி ரூபாய் வசூலித்து தர்பார் படம் சாதனை படைத்துள்ளது என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

இது உண்மையான செய்தியா என்பது கேள்விக்குறி. ரஜினியை சூப்பர் ஸ்டார் ஆக காட்ட வேண்டுமானால் மற்றய நடிகர்கள் 100 கோடி வசூல் என்று மூன்றாம் நாள் பணம் கொடுத்து செய்தி வெளியிடுவது போல இதுவும் மார்க்கட்டை தக்க வைக்கும் நாடகமா என்பது தெரியவில்லை.

150 கோடி என்று 50 கோடி அதிகமாக எழுதியிருப்பதே சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

லைக்கா சொன்னால் அது சரியாகத்தானிருக்கும்.. அல்லவா..?

Related posts