இம்ரான் கானின் அழைப்பை ஏற்ற மஹிந்த ராஜபக்ஷ

பாகிஸ்தானிற்கு விஜயம் செய்யுமாறு அந்நாட்டு பிரதமர் விடுத்த அழைப்பினை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஏற்றுக் கொண்டுள்ளார்.

இந்நாட்டிற்கு விஜயம் செய்துள்ள பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் ஷாட் மஹ்மூத் குரைஸி, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை நேற்று (02) சந்தித்த போது இந்த அழைப்பினை விடுத்திருந்தார்.

நேற்று மாலை அலரி மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெற்றிருந்தது.

இதன்போது பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் அந்நாட்டு பிரதமர் இம்ரான் கானின் விஷேட கடிதம் ஒன்றையும் பிரதமரிடம் ஒப்படைத்திருந்தார்.

Related posts