சகல மக்களையும் சமத்துவ அந்தஸ்த்துடன் அரவணைப்பதே நோக்கம்

இனம், மதம், கட்சி பேதங்கள் இன்றி சகல மக்களையும் சமத்துவ அந்தஸ்த்துடன், அரவணைப்பதே தமது நோக்கம் என்று வீடமைப்பு கட்டிட நிர்மானத்துறை கலாசார அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது. இதன் அடிப்படையில் தாய்நாட்டிற்கு பெருமை சேர்க்கும் ஜனநாயக ரீதியான கொள்கை பிரகடனம் விரைவில் வெளியிடப்படும் என்றும் கூறினார்.

நிறைவேற்று அதிகாரத்தை வலுப்படுத்துவதற்கான எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லை. எந்த உறவினரும் தமது அமைச்சிலோ அல்லது அதன் கீழுள்ள நிறுவனங்களிலோ பணியாற்றவில்லை என அவர் கூறினார்.

ஊழல் மோசடியில் ஈடுபட்டவர்களை ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்திலோ, அரசியல் பயணத்திலோ இணைத்துக் கொள்ளபடமாட்டார்கள் என்றும் அமைச்சர் சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டார்.

Related posts