கமல் – ரஜினி இணைவார்களா சினேகனின் நீர்த்துப்போன பதில்

ரஜினியுடன் இணைந்து கமல் அரசியல் செய்வாரா என்பது குறித்து மக்கள் நீதி மய்யத்தின் மாநில பொதுச்செயலாளர் சினேகன் பதில் அளித்தார். மக்கள் நீதி மய்யத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் கவிஞர் சினேகன், புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் இன்று தெரிவித்ததாவது: ”மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், தொடர்ந்து மக்களுக்கு குரல் கொடுத்து வருகிறார். மேலும் பல கிராமங்களுக்குச் சென்று மக்களைச் சந்தித்து வருகிறார். வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் யாருடன் கூட்டணி வைத்துக் கொள்ளும் என்பதை கமல் முடிவு செய்து முறைப்படி அறிவிப்பார். கொள்கை இல்லாத கட்சிகளுடன் கமல் ஒருபோதும் ஒன்றிணைய மாட்டார். ரஜினிகாந்தும் கமலும் இணைந்து அரசியல் களத்தில் நிற்பார்களா? ரஜினிகாந்துடன் கமல் இணைவாரா என்பது குறித்து காலம்தான் முடிவு செய்யும்”. இவ்வாறு சினேகன் தெரிவித்தார்.