அலைகள் வாராந்தப் பழமொழிகள் 31.03.2018 சனிக்கிழமை

இந்த விநாடி நீங்கள் செய்யும் செயலே உங்கள் அடுத்த விநாடி வாழ்வு.. 01. சக்திக்கு இரண்டு முனைகள் இருக்கிறது ஒன்று செக்ஸ்.. இன்னொன்று இறைவன்.. ஒன்று புதிர் மற்றயது புனிதம். எனவேதான் செக்ஸ்சில் இருந்து இறைவனுக்கு செல்வது சுலபம் என்று ஞானிகள் கூறுகிறார்கள். 02. இறைவனை நமக்கு தெரியுமோ தெரியாதோ செக்ஸ்சை நமக்கு நன்றாகத் தெரியும். மனிதனிடமுள்ள மாபெரும் சக்தி எது என்றால் அது செக்ஸ்தான். 03. செக்ஸ் புயலடிக்கும் கடலைப் போன்றது, அதில் மாட்டிக் கொள்வது அபாயமானது. அதிலிருந்து வெளி வருவதும் மிகவும் கடினம். 04. எப்படி மின்சாரத்தால் பல்வேறு கருவிகளை இயக்குகிறோமோ அதுபோல செக்ஸ்சும் ஒரு மின்சாரம்தான். அதை ஒரு விசையாக வைத்து பல்வேறு பணிகளை செய்ய வேண்டும். மின்சாரத்தில் கை வைத்து மரணிக்கக் கூடாதல்லவா..? 05. செக்ஸ்சை காதலாக, அன்பாக, பக்தியாக, லட்சியமாக,…

அலைகள் வாராந்தப் பழமொழிகள் 18.03.2018 ஞாயிறு

நோயின்றி வாழ, நோயை வெல்ல மறக்கின்ற ஞானத்தை பயிலுங்கள்.. 01. நேயைத் தீர்க்க இரண்டு வழிகள் உள்ளன 01. வைத்தியரிடம் போவது 02. அந்த நோயே நமக்கு இல்லை என்பது போல நடிப்பது. 02. ஒரு நோயால் நாம் பாதிக்கப்படுகின்றபோது அப்படியொரு நோய் நமக்கு இல்லை என்று நடித்தால் அது இல்லாமல் போகும். இதற்கு மறக்கின்ற ஞானம் என்று பெயர். 03. காய்ச்சல் வந்துவிட்டதா அது இல்லவே இல்லை என்று உறுதியாக நம்பினால் அது இல்லாமலே போகும். 04. இதற்கு மன ஒருமை என்று சொல்லுவார்கள், சரியான மன ஒருமை இல்லாவிட்டால் இது சாத்தியமில்லை. மன ஒருமை என்றால் ஒரு புள்ளியில் மனதை வைப்பது. 05. எலும்புக்காக சண்டை போடும் இரண்டு நாய்களின் முன்னால் போய் ” உஸ் சத்தம் போடாதீர்கள் ” என்றால் அவை நம்மை…

மரணிக்க முதல் செல்வா பாண்டியர் எழுதிய கடைசி விமர்சன உரை..

தன்னுயிர் தந்து தந்தையானவனின் இந்த எழுத்தே புகழ் வானத்தின் அசரீரியாகட்டும்.. நாளை டென்மார்க் கேர்னிங் நகரில் நடக்க இருக்கும் கிலரி கிளிண்டன் தோற்றாரா தோற்கடிக்கப்பட்டாரா என்ற நூலினை தமிழகத்தில் அச்சிட்டவர் காலம் சென்ற தோழர் செல்வா பாண்டியர். அவரோடு தமிழர் நடுவத்தின் தோழர் சுரேஸ் பாண்டியரும் மரணித்திருந்தார். இரண்டு உயிர்கள் அன்று தியாக வெளியில் கலந்தன. அந்த நூலை.. பல வாரங்களா கண்விழித்து பிரதிபார்த்து படித்து, நிறைவாக செல்வா பாண்டியர் எழுதிய நூலுக்கான விமர்சன உரை இங்கு தரப்படுகிறது. இவை சாதாரண வரிகளா என்ன..? ஓர் உயிர் தான் எண்ணியதை எழுதிச் சென்ற உன்னதமான வரிகள்.. காலத்தை வென்ற ஜீவனுள்ள தமிழ் சொற்கள். தோழர் செல்வா பாண்டியர் இந்த நூலை அச்சடிக்கும்போது படித்துவிட்டு எழுதிய அவர் வாழ்வின் நிறைவு விமர்சனம் இது. முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்கு பிறகு சோர்ந்துப்போய்…

இரண்டாம் பாகம் : உயிர்வரை இனிக்கிறது யாழ்ப்பாணம்.. பயணக்கட்டுரை அத் 18

மன்னார் தீவு மனதை விட்டு நீங்காத பதிவுகள்.. அடுத்து பேசாலை திரும்பி எனது நண்பரும் பாடசாலை அதிபருமான பெர்ணாண்டோவை பார்த்தாக வேண்டும். சிறிது தாமதித்தாலும் அவர் தேவாலயம் சென்றுவிட வாய்ப்பு இருப்பதாக ஒலிவர் கூறினார். தேவாலயம் செல்வதோ வழிபடுவதோ அல்ல அங்கு முக்கியம். வாழ்க்கையை தேவாலயங்கள் இயக்குகின்றனவா இல்லை வாழ்க்கை தேவாலயத்தை இயக்குகிறதா என்பதை பிரித்தறிய முடியாதளவுக்கு அவர்கள் வாழ்வும் தேவாலயமும் கரைந்து கிடப்பதே அங்கு நான் கண்ட முக்கியம். இப்படி பலதும் பத்துமாக எண்ணங்கள் கரை புரண்டோட எனது பயணத்தின் தேடலை அசை போட்டபடியே வீதியையே பார்த்துக் கொண்டிருந்தேன். பிலிம் ரோல் ஓடுவதுபோல மன்னார் ஓடிக்கொண்டிருந்தது. இந்தப் பயணத்தொடரை ஆரம்பித்தபோதே ஆட்டோகிராப் திரைப்படத்தில் வரும் பாடசாலை நண்பர்கள் சந்திப்பு போல ஒரு சந்திப்பை உருவாக்கவே காத்திருந்தேன். ஆனால் அதற்கான பதமுடைய ஒருவரைக்கூட என்னால் சந்திக்க முடியவில்லை.…

TAKE THAT | DEYO & VashanthS புதிய இசைக்காணொளி எம்.ரி.வி தரத்தில்..

இசையமைப்பு டெயோ டிலக்சன்-பாடல் இயக்கம், படத்தொகுப்பு, வர்ணம், நடிப்பு வஸந்த் செல்லத்துரை.. TAKE THAT | DEYO & VashanthS feat. Markia ஒரு காலத்தில் பாடல்கள் என்றால் அது தமிழகத்தில் இருந்துதான் வரவேண்டும் என்ற கருத்து தமிழரிடையே இருந்தது. இன்றும் அதன் சாரல் சிலரின் மன முகங்களில் படரத்தான் செய்கிறது.. ஆனால் டிஜிற்றல் உலகமும் புலம் பெயர் வாழ்வும் ஈழத் தமிழர்களின் கரங்களில் தந்த மிகப்பெரிய வரப்பிரசாதம் பாடல் உருவாக்கமாகும். சர்வதேசத்தில் தமிழ் இளையோர் ஏற்படுத்தியிருக்கும் வலையாக்கமானது இன்று சர்வதேச தரத்தை எட்டித் தொடும் பாடல்களை தரக்கூடியதாக விரிவடைந்து வருகிறது. ஒரு பாடலை எடுப்பதானால் அதன் அவுட்புட் எனப்படும் இறுதிப்பெறுமானம் இயக்குநரின் தலைக்குள் ஓட வேண்டும். ஓடினாலும் அதை நிதர்சனத்தில் ஓடவிட முடியாது.. தொழில் நுட்ப அறிவு, அதை புரிந்த கலைஞர்கள், வெளியிட பணம்.. சந்தைப்படுத்தல்…

டென்மார்க்கில் நடைபெற்ற புத்தக வெளியீட்டுவிழாவும் உருவப்பட திரை நீக்கமும்

வேலுப்பிள்ளை மனோகரன் உருப்படங்களை திறந்து வைத்தார்.. டென்மார்க்கில் தமிழர்கள் அதிகம் வாழும் கேர்னிங் நகரில் 09.06.2018 சனிக்கிழமை மாலை நடைபெற்ற நூல் வெளியீட்டுவிழா மக்கள் மத்தியில் பலத்த பாராட்டுக்களை பெற்றுள்ளது. பல்கலை திலகம் ராஜா குணசீலனின் வரவேற்புரையும், பாடல் அரசு பாத்தியின் வணக்கப்பாடலுடனும் நிகழ்ச்சி ஆரம்பித்தது. அமைதி வணக்கம், உருப்பட திரை நீக்கத்தைத் தொடர்ந்து நூலை வெளியிட்டு வைத்தார் டென்மார்க்கில் வாழும் இலக்கிய கர்த்தாவும் மனித உரிமைகள் செயற்பாட்டாளரும் இலங்கை அரசின் எழுத்துக்கான விருது பெற்றவருமான தமிழ்புகழ் தர்மா தர்மகுலசிங்கம் நுலை வெளியிட்டு வைக்க திரு. வேலுப்பிள்ளை மனோகரன் பெற்றுக் கொண்டார். டென்மார்க்கில் வாழும் இலக்கிய கர்த்தாவும் மனித உரிமைகள் செயற்பாட்டாளரும் இலங்கை அரசின் எழுத்துக்கான விருது பெற்றவருமான தமிழ்புகழ் தர்மா தர்மகுலசிங்கம் நுலை வெளியிட்டு வைக்க திரு. வேலுப்பிள்ளை மனோகரன் பெற்றுக் கொண்டார். அதைத் தொடர்ந்து…