தமி­ழ­ர­சுக்­கட்­சியின் தலை­மைத்­துவ போட்­டிக்கு முடிவு கட்ட வேண்டும்!

இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்­சியின் செய­லாளர் நிய­மன விவ­கா­ரத்தில் பெரும் சர்ச்சை ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. கடந்த 27ஆம் திகதி இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்­சியின் மத்­தி­யக்­கு­ழுக்­கூட்டம் திரு­கோ­ண­ம­லையில் இடம்­பெற்­றது. இதன்­போது பொதுச்­செ­ய­லாளர் பத­விக்­கான தெரிவு இடம்­பெற்­ற­போது சர்ச்­சைக்கு மத்­தியில் சண்­முகம் குக­தாசன் அந்தப் பத­விக்கு நிய­மிக்­கப்­பட்டார்.

அத்­துடன் சிரேஷ்ட உப­த­லை­வ­ராக சி.வி.கே. சிவ­ஞா­னமும் இணை பொரு­ளா­ளர்­க­ளாக ஞா, சிறி­நேசன், கன­க­ச­பா­பதி ஆகி­யோரும் துணைத்­த­லை­வர்­க­ளாக கே.வி. தவ­ராசா, சார்ள்ஸ் நிர்­ம­ல­நாதன், தவ­ராசா கலை­ய­ரசன், பாக்­கி­யச்­செல்வம் அரி­ய­நேந்­திரன், வைத்­தியர் சத்­தி­ய­லிங்கம் ஆகி­யோரும் இணைச்­செ­ய­லா­ளர்­க­ளாக திரு­மதி சாந்தி சிறிஸ்­கந்­த­ராஜா, திரு­மதி ரஞ்­சனி கன­க­ராஜா, எம். சர­வ­ண­பவன், இரா. சாணக்­கியன், சிவ­மோகன் ஆகி­யோரும் எம்.ஏ.சுமந்­திரன் உட்­பட 13 செயற்குழு உறுப்­பி­னர்­களும் தெரிவு செய்­யப்­பட்­டனர்.

ஆனாலும் மத்­திய செயற்­குழு கூட்­டத்தில் இடம்­பெற்ற இந்த தெரி­வுகள் தொடர்பில் முதல்நாள் நடைபெற்ற பொதுச்­ச­பைக்­கூட்­டத்தில் ஆரா­யப்­பட்ட போது பெரும் சர்ச்சை ஏற்­பட்­டி­ருந்­தது. உறுப்­பி­னர்­க­ளி­டையே வாதப் பிர­தி­வா­தங்கள் அதி­க­ரித்து கைக­லப்பில் ஈடு­படும் அள­வுக்கு நிலைமை மோச­ம­டைந்­தது.

செய­லாளர் நிய­ம­னத்­துக்கு எதி­ராக எதிர்ப்பு வெளி­யி­டப்­பட்­டது. இத்­த­கைய சர்ச்சை எழுந்­த­தை­ய­டுத்து பொதுச்­செ­ய­லாளர் தெரி­வுக்­கான பகி­ரங்க வாக்­கெ­டுப்பு கோரப்­பட்­டது. இதற்கும் ஒரு­த­ரப்பு எதிர்ப்பு வெளி­யிட்­டி­ருந்­தது. ஆனாலும் புதி­ய ­நிர்­வா­கத்­தி­ன­ருக்­கான அனு­ம­தியை கோரும் பிரே­ரணை தமி­ழ­ர­சுக்­கட்­சியின் தலைவர் சிறீ­த­ர­னினால் சமர்ப்­பிக்­கப்­பட்­டது. இத­னை­ய­டுத்து இடம்­பெற்ற வாக்­கெ­டுப்பில் எட்டு மேல­திக வாக்­கு­க­ளினால் பிரே­ரணை அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டது.

ஆனாலும் இந்த வாக்­கெ­டுப்பை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது என்று பெரு­ம­ளவா­ன­வர்கள் சர்ச்­சையை கிளப்­பியதைய­டுத்து தேசிய மாநாட்டை ஒத்­தி­வைப்­ப­தாக மூத்த தலைவர் மாவை சேனா­தி­ராஜா அறி­வித்­த­துடன் கூட்­டத்தை முடி­வுக்கு கொண்­டு­ வந்­தி­ருந்தார்.

செய­லாளர் நிய­மன சர்ச்சை கார­ண­மாக மறுநாள் இடம்­பெ­ற­வி­ருந்த பொதுச்­ச­பை­கூட்டம் கால­வ­ரை­ய­றை­யின்றி ஒத்­தி­வைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. இந்த விடயம் தொடர்பில் மத்­திய குழுக்­கூட்­டத்தில் ஆராய்ந்து முடிவு எடுக்­கப்­படும் என்று மாவை சேனா­தி­ராஜா அறி­வித்­தி­ருந்தார்.

தமி­ழ­ர­சுக்­கட்­சியின் பொதுச் செய­லாளர் பத­விக்கு சண்­முகன் குக­தாசன் தெரிவு செய்­யப்­பட்­டுள்­ளதை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது என்று அறி­வித்­துள்ள மட்­டக்­க­ளப்பு, அம்­பாறை, திரு­கோ­ண­மலை மாவட்­டங்­களின் பெரும்­பான்­மை­யான பொதுச்­சபை உறுப்­பி­னர்கள் அப்­ப­த­விக்கு மீள் தெரிவை செய்­வ­தற்கு வாக்­கெ­டுப்பை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்­துள்­ள­தா­கவும் செய்­திகள் வெளி­யா­கி­யி­ருந்­தன.

இதே போன்றே தெரிவை அவ்வாறே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சுமந்திரன் அணியினர் கோரிவருகின்றனர். இது குறித்து அவர் கடிதம் ஒன்றையும் கட்சியின் தலைவர் சிறிதரனுக்கு அனுப்பியுள்ளார்.

இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்­சியைப் பொறுத்­த­வ­ரையில் நிர்­வா­கக்­குழு தெரி­வா­னது சர்ச்­சை­யின்றி ஒரு­மைப்­பாட்­டு­டனே இடம்­பெற்று வந்­தி­ருக்­கின்­றது. ஆனால் இம்­முறை அந்த தெரி­வா­னது பெரும் சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­துடன் சந்தி சிரிக்கும் நிலை­யையும் உரு­வாக்­கி­யி­ருக்­கி­றது.

ஏற்­க­னவே கட்­சியின் தலைவர் தெரிவில் பெரும் போட்டா போட்டி இடம்­பெற்­றி­ருந்­தது. தலைவர் தெரி­வில் தமி­ழ­ர­சுக்­கட்­சியின் பேச்­சாளர் எம்.ஏ. சுமந்­திரன், பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எஸ். சிறீ­தரன் ஆகி­யோ­ருக்­கி­டையில் கடும் போட்டி நில­வி­யி­ருந்­தது. தலைவர் தெரிவு விட­யத்தில் வாக்­கெ­டுப்­பின்றி பொது இணக்­கப்­பாட்டின் அடிப்­ப­டையில் ஒருவர் தெரிவு செய்­யப்­பட வேண்டும் என்று மூத்த தலை­வர்­க­ளான இரா. சம்­பந்தன், மாவை சேனா­தி­ராஜா உட்­பட்ட பலரும் கோரிக்­கை­ வி­டுத்­தி­ருந்­தனர்.

ஆனாலும் இந்த ஆலோ­சனை பின்­பற்­றப்­ப­டாது தலைவர் பத­விக்கு வாக்­கெ­டுப்பு நடத்­தப்­பட்­டி­ருந்­தது. இந்த வாக்­கெ­டுப்பில் சுமந்­திரன் எம்.பி.யை தோற்­க­டித்து சிறீ­தரன் தமி­ழ­ர­சுக்­கட்­சியின் தலை­வ­ராக தெரிவு செய்­யப்­பட்­டி­ருந்தார். தமி­ழ­ர­சுக்­கட்­சியின் வர­லாற்றில் பொது இணக்­கப்­பா­டின்றி முதல் தட­வை­யாக தலைவர் பத­விக்கு வாக்­கெ­டுப்பு நடத்­தப்­பட்­டி­ருந்­தது.

இதன் தொடர்ச்­சி­யா­கவே கடந்த 27ஆம் திகதி மத்­திய செயற்­கு­ழுக்­கூட்­டத்தில் செய­லாளர் உட்­பட்ட நிர்­வா­கக்­கு­ழு­வுக்­கான தெரிவு இடம்­பெற்­றி­ருந்­தது. அதிலும் சர்ச்சை ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. வட­ மா­கா­ணத்தை சேர்ந்த சிறீ­தரன் தலை­வ­ராக தெரிவு செய்­யப்­பட்­ட­தை­ய­டுத்து கிழக்கு மாகா­ணத்தை சேர்ந்த ஒரு­வரை செய­லா­ள­ராக நிய­மிக்­க­வேண்டும். என்ற விடயம் கருத்தில் கொள்­ளப்­பட்­டி­ருந்­தது.

மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தை சேர்ந்த முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஞா. சிறி­நே­சனை செய­லா­ள­ராக நிய­மிக்­க­வேண்டும் என்று கட்­சியின் மட்­டக்­க­ளப்பு மாவட்ட செயற்­கு­ழுவில் தீர்­மானம் எடுக்­கப்­பட்­டி­ருந்­தது. ஆனாலும் திரு­கோ­ண­மலை மாவட்­டத்தை சேர்ந்த குக­தா­சனை நிய­மிக்க வேண்டும் என்று சுமந்­திரன் தரப்­பினர் கோரிக்கை விடுத்­த­தை­ய­டுத்தே இந்த நிய­ம­னத்தில் சர்ச்சை ஏற்­பட்­டி­ருந்­தது.

தற்­போது செய­லாளர் நிய­ம­னத்தை மீண்டும் மீள் பரி­சீ­லனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ள­மை­யினால் சர்ச்சை நிலைமை தொடர்ந்து வரு­கின்­றது. இந்த சர்ச்­சைக்கு முடிவு காணப்­பட்டு கட்சிக்குள் காணப்படும் உள்­மு­ரண்­பா­டுகளை களை­வ­தற்­கான நட­வ­டிக்கை எடுக்க வேண்­டி­யதன் அவ­சியம் தற்­போது ஏற்­பட்­டி­ருக்­கின்­றது.

இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்சி வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் மத்­தியில் செல்­வாக்கு பெற்ற கட்­சி­யாக திகழ்ந்­தி­ருந்­தது. இந்­தக்­கட்­சியின் தலை­மை­யி­லேயே தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­பா­னது செயற்­பட்டு வந்­தது. 2001 ஆம் ஆண்டு தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்பு உரு­வாக்­கப்­பட்ட போது அதற்கு தமிழர் விடு­த­லைக்­கூட்­டணி தாய்க்­கட்­சி­யாக செயற்­பட்­டது. ஆனாலும் கூட்­ட­ணிக்குள் ஏற்­பட்ட சர்ச்­சையை அடுத்து ஆனந்த சங்­கரி கட்­சியின் சின்­னத்தை தன­தாக்­கிக்­கொண்டார். இத­னை­ய­டுத்து தமி­ழ­ர­சுக்­கட்­சியின் வீட்டு சின்­னத்தில் கூட்­ட­மைப்பு செயற்­ப­ட­வேண்­டிய நிலை ஏற்­பட்­டி­ருந்­தது. அன்­று­முதல் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­புக்கு தமி­ழ­ரசு கட்­சியே தாய்க்­கட்­சி­யாக செயற்­பட்டு வந்­தது.

இரா. சம்­பந்தன் தலை­மையில் செயற்­பட்ட தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்­பா­னது 2009ஆம் ஆண்டு யுத்தம் முடி­வுக்கு கொண்­டு ­வ­ரப்­பட்­டதன் பின்னர் பிள­வு­களை சந்­தித்­தது. ஆனாலும் கூட்­ட­மைப்­பாக செயற்­பட்டு வந்­தி­ருந்­தது. கடந்த 2022ஆம் ஆண்டு உள்­ளூ­ராட்சி தேர்தல் அறி­விக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து தமி­ழ­ர­சுக்­கட்­சியின் தான்­தோன்­றித்­த­ன­மான செயற்­பாடு கார­ண­மாக கூட்­ட­மைப்பு பிள­வ­டைந்­தது.

அதில் அங்கம் வகித்த ரெலோ, மற்றும் புளொட் ஆகிய கட்­சிகள் ஜன­நா­யக தமிழ்த் தேசியக் கூட்­ட­ணி­யாக மேலும் மூன்று கட்­சி­களை ஒன்­றி­ணைத்து செயற்­பட ஆரம்­பித்­தி­ருந்­தன. தமி­ழ­ர­சுக்­கட்சி தனித்து நின்­றது. தற்­போது அந்­தக்­கட்­சிக்குள் தலை­மைத்­துவப் போட்டி ஏற்­பட்டு உள் முரண்­பாடு அதி­க­ரித்­தி­ருக்­கின்­றது. பொதுச்­ச­பைக்­கூட்­டத்தில் கைக­லப்பு இடம்­பெறும் அள­வுக்கு நிலைமை மோச­ம­டைந்­தி­ருக்­கின்­றது.

தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்பில் தாய்­க்கட்­சி­யாக இருந்த தமி­ழ­ர­சுக்­கட்சி தற்­போது உள்­மு­ரண்­பாட்­டுக்குள் சிக்கி ஊச­லா­டு­கின்­றது.

இந்த சர்ச்­சைக்கு முடிவு காணப்­பட வேண்டும். அத்­துடன் தமி­ழ­ர­சுக்­கட்­சியுடன் ஏனைய தமிழ்த் தேசியக் கட்­சி­களும் ஒன்­றி­ணைந்து தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வு­காண நட­வ­டிக்­கை­களை எடுக்­க­வேண்டும்.

தமி­ழ­ர­சுக்­கட்­சியின் புதிய தலை­வ­ராக சிறீ­தரன் பத­வி­யேற்­ற­தை­ய­டுத்து தமிழ்த் தேசியக் கட்­சி­களை ஒன்­றி­ணைத்து ஓர­ணி­யாக செயற்­பட தயார் என்று அறி­வித்­தி­ருந்தார். அவ­ரது இந்த அறி­விப்­புக்கு தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்பில் அங்கம் வகித்த கூட்­டுக்­கட்­சி­களின் தலை­வர்கள் சாத­க­மான சமிக்­ஞையை வெளிக்­காட்­டி­யி­ருந்­தனர். தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்பை அர­சியல் கூட்­டுக்­கட்­சி­யாக பதிவு செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்­துள்­ளனர்.

தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்­பாக நான்கு கட்­சிகள் ஒன்­றி­ணைந்து செயற்­பட்ட சம­யத்­திலும் கூட்­ட­மைப்பை பதிவு செய்­யு­மாறு கூட்­டுக்­கட்­சிகள் வலி­யு­றுத்­தி­யி­ருந்­தன. ஆனால் அதற்கு இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்­சியின் தலைமை செவிசாய்க்கவில்லை. அதன் காரணமாகவே பிரிவுகளும் பிளவுகளும் ஏற்பட்டிருந்தன.

தற்போதைய நிலையில் தமிழ்த் தேசியக்கட்சிகள் ஒன்றிணைந்து தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கவும் அவர்களின் பிரச்சினைக்கு தீர்வுகாணவும் முன்வரவேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கின்றது.

வெறும் சுயநல அரசியலை கருத்தில் கொண்டு கட்சிகள் மத்தியில் உள் முரண்பாடுகளை அதிகரிக்காது ஒற்றுமையுடன் பயணிப்பதற்கு சகல தரப்பும் முன்வரவேண்டும்.

இலங்கை தமிழரசுக்கட்சியை பொறுத்தவரையில் தலைமைத்துவப் போட்டிக்காக முரண்படும் செயற்பாடு முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும். மூத்த தலைவர்களுக்கு மதிப்பளித்து அவர்களது ஆலோசனைகளுக்கு இணங்க செயற்படும் மனநிலை புதிய நிர்வாக குழுவினருக்கு ஏற்படவேண்டும். இதனைவிடுத்து நான்பெரிது, நீ பெரிது என முரண்படுவதனால் கட்சியின் கட்டுக்கோப்பு சீர்குலையுமே தவிர வேறெதுவும் இடம்பெறப்போவதில்லை.

எனவே இனியாவது தமிழரசுக்கட்சியின் தலைமையும் தமிழ் தேசியக்கட்சிகளின் தலைமைகளும் சிந்தித்து செயற்பட வேண்டும் என்று வலியுறுத்த விரும்புகின்றோம்.

Related posts