இந்தியில் காதல் படங்கள்: மிருணாள் தாக்குர் ஆசை

பிரபல இந்தி நடிகை மிருணாள் தாக்குர், ‘சீதாராமம்’ படம் மூலம்தமிழ், தெலுங்கு, மலையாளம் உட்பட தென்னிந்திய மொழிகளிலும் பிரபலமானார். தெலுங்கில் நானியுடன் இவர் நடித்த ‘ஹாய் நன்னா’ படமும் வரவேற்பைப் பெற்றது. விஜய் தேவரகொண்டாவுடன் ‘ஃபேமிலி ஸ்டார்’ என்ற படத்தில் இப்போது நடித்து வருகிறார்.

இந்நிலையில், இந்தி பட இயக்குநர்களிடம் தனது திறமையை நிரூபித்து சோர்வடைந்துவிட்டதாக அவர் கூறியுள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, “காதல் திரைப்படங்களைப் பார்த்துதான் வளர்ந்தோம். இடையில் திடீரென அதுபோன்ற கதைகள் வராமல் நின்றுவிட்டன. தங்களுக்கு காதல் பிடிக்கவில்லை என்று காட்டிவிட்டு ரகசியமாக அதுபோன்ற படங்களைத்தான் எல்லோரும் பார்க்கிறார்கள். சீதாராமம், ஹாய் நன்னா போன்ற காதல் படங்கள் சிறப்பாக வந்ததில் மகிழ்ச்சி. ‘ரொமான்ஸ் குயின்’ என்று என்னை அழைத்ததில் சந்தோஷமடைகிறேன்.

ஏனென்றால் ஷாருக்கான் தான்,காதல் மன்னன். இந்தியில் காதல் படங்களில்நடிக்க ஆசைப் படுகிறேன். ஆனால், அதுபோன்ற கதைகள் எனக்குக் கிடைக்கவில்லை. ஒருவேளை, காதல் கதைகளில் நடிக்கும் அளவுக்கு நான்பிரபலமாகவில்லையோ என்னவோ?

என் நடிப்புத் திறமையை இந்தி இயக்குநர்களிடம் இதற்கு மேல் எப்படி நிரூபிக்க வேண்டும் என்றும் தெரியவில்லை. அதில் நான் சோர்வடைந்து விட்டேன். இவ்வாறு மிருணாள் தாக்குர் தெரிவித்துள்ளார்

Related posts