அட்லீயை நாம் கொண்டாட வேண்டும்

அட்லீயை அதிகம் விமர்சிக்கிறார்கள். ஆனால், அட்லீயை நாம் கொண்டாட வேண்டும். ஷாருக்கானுடன் இணைந்து பாலிவுட்டில் ரூ.1200 கோடி வசூலை குவிப்பது சாதாரண விஷயல்ல” என நடிகர் சிவகார்த்திகேயன் அட்லீக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் அண்மையில் அளித்த நேர்காணல் ஒன்றில், “ஜவான் படத்தின் ட்ரெய்லரை பார்த்த பிறகு இந்தப் படத்தை பாலிவுட் ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என அட்லீயிடம் கூறினேன். ஷாருக்கானுடன் இணைந்து பாலிவுட்டில் ரூ.1,200 கோடி வசூலை குவிப்பதெல்லாம் சாதாரண விஷயமல்ல.

அட்லீயை அதிகம் விமர்சிக்கிறார்கள். ஆனால், அட்லீயை நாம் கொண்டாட வேண்டும். இதே மாதிரி வேறொரு மொழியில் யாராவது இருந்தால் அங்கிருக்கும் மக்கள் அந்த இயக்குநரை பாராட்டுவார்கள். ஆனால், இங்கு அது நடப்பதில்லை.

மாறாக விமர்சிக்கிறார்கள். அதனால் பாருங்கள், அட்லீ பாலிவுட் சென்றுவிட்டார். நமக்கு கமர்ஷியல் சினிமா இயக்குநர் ஒருவர் மிஸ்ஸிங். அட்லீயும், விஜய்யும் இணையும்போது அந்த பாக்ஸ் ஆஃபீஸ் நம்பர் வேறு வகையில் இருக்கும். ஆனால், அது இப்போது மிஸ்ஸாகிறது.

அந்த வகையில் அட்லீ மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. ஒவ்வொரு படத்திலும் அவரது முந்தைய பட சாதனைகளை அவரே முறியடித்து முன்னேறுகிறார். எல்லாரிடமும் ஏதாவது ஒரு பிரச்சினை இருக்கத்தான் செய்யும். கடவுள் படைப்பில் கூட பிரச்சினைகள் இருக்கும்போது நாம் எல்லோரும் மனிதர்கள் தானே” என்றார்.

Related posts