படப்பிடிப்பிற்காக கன்னியாகுமரி சென்ற நடிகர் ரஜினிகாந்த்

இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘வேட்டையன்’. இந்த படத்தில் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்கிறார். மேலும், இந்த படத்தில் அமிதாப் பசசன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், ராணா டகுபதி, பகத் பாசில் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். வேட்டையன்’ படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரியில் நடைபெற உள்ளதால் அவர் அங்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து வெளியே வரும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில்..

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ‘கோச்சடையான்’ திரைப்படம், 2014-ம் ஆண்டு வெளியானது. மிகப்பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்த படம், பெரியளவில் வசூலை ஈட்டவில்லை. இந்த திரைப்படத்தை தயாரிப்பதற்காக ஆட்-ப்யூரோ நிறுவனத்திடம் இருந்து மீடியா ஒன் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம், ரூ.6.2 கோடி கடன் பெற்றிருநபெற்றிருந்தது. அதற்கு லதா ரஜினிகாந்த் உத்தரவாதம் அளித்து கையெழுத்திட்டார்.

இந்த நிலையில் இன்று பெங்களூரு கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணைக்கு லதா ரஜினிகாந்த நேரில் ஆஜரானார். இதனை விசாரித்த நீதிபதிகள், இந்த விசாரணைக்கு லதா ரஜினிகாந்த நேரில் ஆஜரானார். இதனை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் எனக்கூறி அவருக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர். மேலும் வழக்கு விசாரணையை ஜனவரி 6-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

Related posts