அமெரிக்காவும் சீனாவும் ஒப்பந்தத்தை உருவாக்குகின்றன

ஓர் மைல்கல் அபிவிருத்தியாக, அமெரிக்காவும் சீனாவும் அமெரிக்காவில் பல உயிரிழப்புகளுக்கு காரணமான செயற்கை வலிநிவாரணியான (opioid) ஃபெண்டானிலின் உற்பத்தியில் முக்கியமான இரசாயனங்களின் ஏற்றுமதியைத் தடுப்பதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு முக்கியமான ஒப்பந்தத்தை எட்டியுள்ளன.

சான் பிரான்சிஸ்கோவில் அதிபர் ஜோ பைடன் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையேயான இரண்டாவது உச்சிமாநாட்டின் போது இந்த ஒப்பந்தம் முறைப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதுடன், இது உலகளாவிய ஃபெண்டானிலின் நெருக்கடியை நிவர்த்தி செய்வதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை குறிக்கிறது. பிடென் நிர்வாகம் இந்த சாத்தியமான ஒப்பந்தத்தை அதன் ஆற்றலுக்கு பெயர் பெற்ற மற்றும் அமெரிக்காவில் கணிசமான எண்ணிக்கையிலான இறப்புகளுடன் தொடர்புடைய ஃபெண்டானிலின் பெருக்கத்தை எதிர்த்துப் போராடுவதற்கான தனது தற்போதைய உறுதிப்பாட்டில் குறிப்பிடத்தக்க சாதனையாகக் கருதுகின்றது.

தலைவர்களுக்கிடையிலான கலந்துரையாடல்கள் தைவான் மீதான பதட்டங்கள் முதல் சீனாவின் இராணுவ நவீனமயமாக்கலை பாதிக்கும் அமெரிக்க ஏற்றுமதி கட்டுப்பாடுகள் தொடர்பான கரிசனங்கள் வரையிலான முக்கியமான பிரச்சினைகளை உள்ளடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவில் உள்ள போதைப்பொருள் துஷ்பிரயோகத்திற்கான தேசிய நிறுவனம் (NIDA) வரையறுத்துள்ளதன் பிரகாரம் ஃபெண்டானிலின் பின்னணி, இந்த மருந்தின் ஆற்றல் மற்றும் இரட்டை தன்மையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. ஃபெண்டானில் ஓர் சக்திவாய்ந்த செயற்கை வலிநிவாரணி (opioid) ஆகும், இது மார்பினைப் போன்றது ஆனால் அதிவேகமான அதிக சக்தி வாய்ந்ததுடன், இது மருத்துவ அமைப்புகளில் சட்டப்பூர்வமாகப் பயன்படுத்தப்படும் பரிந்துரைக்கப்படும் மருந்தாகும்.

இருப்பினும், அதன் அதிசக்தி வாய்ந்த வலிமை சட்டவிரோத உற்பத்தி மற்றும் பயன்பாட்டிற்கு வழிவகுத்தது. மார்பினைப் போலவே, ஃபெண்டானில் பொதுவாக கடுமையான வலி உள்ள நோயாளர்களுக்கு, குறிப்பாக அறுவை சிகிச்சைக்குப் பின்னரான சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகிறது. இது நோயாளிகள் மற்ற வலிநிவாரணிகளுக்கு (opioid) உடலியல் சகிப்புத்தன்மையை விருத்தி செய்து கொண்ட நாட்பட்ட வலியுடைய சந்தர்ப்பங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. சகிப்புத்தன்மை, விரும்பிய விளைவுகளை அடைவதற்கு மருந்தின் அதிகமான அல்லது அதிக தடவைகள் தேவைப்படுகின்ற நிகழ்வு ஆகியன வலிநிவாரணி (opioid) மருந்துகளை நிர்வகிப்பதிலுள்ள சிக்கலை சுட்டிக் காட்டுகிறது.

எதிர்பார்க்கப்பட்ட ஒப்பந்தங்களின் முக்கிய கூறுகளில் ஒன்று, ஆகஸ்ட் 2022 இல் அப்போதைய அமெரிக்க சபையின் சபாநாயகரான நான்சி பெலோசியின் தைவான் விஜயத்தைத் தொடர்ந்து பெய்ஜிங்கால் மூடப்பட்ட இராணுவத் தொடர்பாடல் அலைவரிசைகளை மீண்டும் திறப்பதாகும். இந்த அலைவரிசைகளின் மறுசீரமைப்பு, தென் சீனக் கடலில் அமெரிக்கா மற்றும் அதனுடன் இணைந்த கண்காணிப்பு விமானங்களுக்கு அருகாமையில் சீனப் போர் விமானங்களின் அபாயகரமான சூழ்ச்சிகள் பற்றிய கரிசனங்கள் அதிகரித்து வருவதன் பிரதிபலிப்பின் தொடர்ச்சியாக வருகிறது.

பேச்சுவார்த்தைகளின் மையத்தில் ஃபெண்டானில் ஒப்பந்தம் உள்ளது, அது தற்போது அதன் இறுதி கட்டத்தில் உள்ளதுடன், இது போதைப்பொருள் விற்பனையாளர்கள் ஆபத்தான வலிநிவாரணிகளை (opioid) உற்பத்தி செய்கின்ற மெக்சிகோவிற்கு முன்னோடியான இரசாயனங்கள் செல்வதைத் தடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பெய்ஜிங் ஃபெண்டானில் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை முறியடிக்க முயற்சித்த போதிலும், சீன நிறுவனங்கள் மெக்ஸிகோவிற்கு முன்னோடியான இரசாயனங்களை வழங்குவதன் மூலமாக இடைவெளிகளைக் கண்டறிந்தன.

இதற்கு பதிலளிக்கும் விதமாக, அமெரிக்க திறைசேரி சமீபத்தில் சீன நிறுவனங்கள் மற்றும் மருந்து கைத்தொழில் துறையுடன் தொடர்புடைய நிர்வாகிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகளுடன் ஃபெண்டானில் வர்த்தகத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 25 சீன நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது.

ட்ரம்ப் காலத்தில் போதைப்பொருள் தடுப்பு ஆய்வகத்துடன் இணைக்கப்பட்ட சீன போலீஸ் நிறுவனம் மீது விதிக்கப்பட்ட தடைகளை நீக்குவதற்கு அமெரிக்கா மறுத்ததை மேற்கோள் காட்டி, முன்னோடியான இரசாயனங்களின் வர்த்தகத்தை கட்டுப்படுத்த சீனா தயங்குவது குறிப்பிடத்தக்க சர்ச்சைக்குரியதாகும். ஃபெண்டானில் உடன்படிக்கையின் சாத்தியமான வெற்றி, ஜனாதிபதி பைடனுக்கு ஒரு குறிப்பிடத்தக்க வெற்றியாகக் கருதப்படுவதுடன், அவர் வரவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலுக்குத் தயாராகும்போதான முன்னுரிமையான வலிநிவாரணி (opioid) நெருக்கடியை நிவர்த்தி செய்வதற்கான அவரது அர்ப்பணிப்புடன் ஒத்துப்போகிறது.

இந்த விவரங்கள் வெளிவருகையில், இந்த சந்திப்பு அமெரிக்க-சீனா உறவுகளை மீள்வடிவமைப்பதில் மூலோபாய முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளதுடன், இரு தலைவர்களும் உலகளவில் எதிரொலிக்கும் சிக்கலான பிரச்சினைகளை வழிநடத்துகின்றனர். ஃபெண்டானைல் ஒப்பந்தம், நிறைவேற்றப்பட்டால், பரந்த புவிசார் அரசியல் கரிசனங்களை ஒரே நேரத்தில் நிவர்த்தி செய்யும் அதே வேளையில், ஒரு பிரதானமான பொது சுகாதார சவாலை எதிர்கொள்ளும் கூட்டு முயற்சியைக் குறிக்கிறது.

இதற்கிணையான இரு கட்சி முயற்சியில், அமெரிக்க செனட்டர்களான டான் சுலிவன் மற்றும் மைக் ரவுண்ட்ஸ், ஆறு சகாக்களுடன் இணைந்து, அமெரிக்காவில் ஃபெண்டானிலின் பேரழிவு தாக்கத்தை சுட்டிக் காட்டியுள்ளதுடன் ஃபெண்டானில் விநியோகச் சங்கிலியில் சீனாவின் வகிபங்கை வலியுறுத்தியுள்ளனர்.

ஜனாதிபதி பைடனுக்கு அவர்கள் எழுதிய கடிதம், ஃபெண்டானிலை உற்பத்தி செய்யும் முன்னோடியான இரசாயனங்களின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்துவதற்கு சீனாவின் தீர்க்கமான நடவடிக்கைக்கு அழைப்பு விடுப்பதுடன், இது அதிகரித்து வரும் ஃபெண்டானில் நெருக்கடி தொடர்பான பகிரப்பட்ட கவலையை பிரதிபலிக்கிறது. செனட்டர்கள் பொறுப்பானவர்களை பொறுப்புக்கூற வைப்பதன் அவசரத்தை எடுத்துக்காட்டி, கூட்டு முயற்சிகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றனர், ஃபெண்டானில் பரிமாற்றத்தை நிறுத்துவதற்கு மெக்சிகோவின் ஜனாதிபதி ஜிக்கு அழைப்பு விடுத்ததை மேற்கோள் காட்டுகின்றனர்.

நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமெரிக்க நிலையத்தின் தகவலின் பிரகாரம், 2020 முதல் 2021 வரை முதன்மையாக ஃபெண்டானில் தொடர்பான இறப்புகளில் 24.1 சதவீதம் அதிகரிப்புடன், ஃபெண்டானில் நெருக்கடி இறப்புகளில் குறிப்பிடத்தக்க உயர்வைக் கண்டுள்ளது. செனட்டர்கள் தீவிரமடைந்து வரும் ஃபெண்டானில் நெருக்கடியை நிவர்த்தி செய்வதற்கு சீனாவின் உடனடி நடவடிக்கையின் முக்கியமான தேவையை வலியுறுத்துவதுடன், தடைசெய்யப்பட்ட ஃபெண்டானில் உற்பத்தியை நிறுத்தவும், பெருந்தொற்றுக்கு பங்களிப்பதில் சீனாவின் வகிபங்கிற்கு பொறுப்பேற்கவும் ஜனாதிபதி ஜியிடம் வேண்டுகோள் விடுக்குமாறு ஜனாதிபதி பைடனை வலியுறுத்துகிறார்.

சுருக்கமாக, மூலோபாய ஒப்பந்தங்கள் மற்றும் இரு கட்சி முன்முயற்சிகளால் குறிக்கப்பட்ட அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளின் ஒருங்கிணைந்த முயற்சிகள், ஃபெண்டானில் நெருக்கடியை எதிர்த்துப் போராடுவதற்கான பகிரப்பட்ட உறுதிப்பாட்டை சுட்டிக் காட்டுகின்றன. இந்த தீர்மானத்தின் மருத்துவ தாக்கங்களை மிகைப்படுத்த முடியாது, ஏனெனில் இது பொது சுகாதாரத்தில் ஃபெண்டானிலின் அழிவுகரமான தாக்கத்தைத் தணிப்பதற்கான ஓர் ஒருங்கிணைந்த முயற்சியைக் குறிக்கிறது. ஒப்பந்தங்களின் விவரங்கள் வெளிவரும்போது, உலகம் உன்னிப்பாக அவதானிப்பதுடன், இந்த அழுத்தமான உலகளாவிய சவாலை எதிர்கொள்வதற்கான கூட்டான மற்றும் வினைத்திறனான அணுகுமுறையை எதிர்பார்க்கிறது.

Related posts