வவுனியா சிறையில் இருந்து 23 கைதிகள் விடுவிப்பு!

நத்தார் தினத்தினை முன்னிட்டு வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்து 23 கைதிகள் பொதுமன்னிப்பில் விடுதலைசெய்யப்பட்டனர்.

இன்று திங்கட்கிழமை (25) நத்தார் தினத்தையொட்டி நாடளாவிய ரீதியாக 1,004 சிறைகைதிகள் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்திருந்தது.

அதற்கமைய வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்து சிறுகுற்றங்களை புரிந்த மற்றும் தண்டப்பணத்தினை செலுத்த முடியாத 23 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.

அவர்கள் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் அதிகாரிகள் முன்னிலையில் இன்றைய தினம் விடுவிக்கப்பட்டனர்.

Related posts