தமிழையும் சிங்களத்தையும் ஒரே நேரத்தில்

தமிழையும் சிங்களத்தையும் ஒரேநேரத்தில் கற்க முயன்று தோல்வியடைந்துள்ளேன் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்

சிங்கள பத்திரிகையொன்றிற்கான பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்

நான் தமிழiயும் சிங்களத்தையும் கற்க முயன்றேன்

நான் இரண்டையும் ஒரேநேரத்தி;ல் கற்க முயன்றேன் தவறுசெய்தேன் இரண்டு மொழிகளை ஒரேநேரத்தில் கற்கமுயல்வது சவாலான விடயம்

எனது கடினமான வேலைப்பளுகாரணமாக இரண்டு மொழிகளையும் கற்கமுடியவில்லை.

என்னால் அடிக்கடி பயன்படுத்தக்கூடிய் சில சொற்களை கற்கமுயல்கின்றேன் -எனக்கு தெரி;ந்த ஒரு சில சொற்களை பேசினாலும் மக்கள் உடனடியாக என்னை நோக்கி வருவதை அவதானித்துள்ளேன்.

எனக்கு மொழிகளை கற்றுக்கொள்வதில் ஆர்வம் அதிகம் பல மொழிகளை கற்றுக்கொள்ள முயல்கின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.

Related posts