‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படக்குழுவிற்கு இயக்குனர் சங்கர் வாழ்த்து

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தீபாவளியை முன்னிட்டு, ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்தில் பபணியாற்றிய படக்குழுவினருக்கு இயக்குனர் சங்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-“ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் – திரைக்கதை மற்றும் இயக்கத்தை பொருத்தவரை கார்த்திக் சுப்புராஜின் சிறப்பான மற்றும் புத்திசாலித்தனமான படைப்பு. கதை- சினிமாவுக்கு மரியாதை.

எதிர்பார்த்திடாத 2-ம் பகுதி. கதாபாத்திரங்கள் இடையே நேர்த்தியான நகர்வு. சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை அதிரடி. எதிர்பார்த்திடாத 2-ம் பகுதி. கதாபாத்திரங்கள் இடையே நேர்த்தியான நகர்வு. சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை அதிரடி. ராகவா லாரன்ஸ் அதிரடி. ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே. சூர்யா சிறப்பான நடிப்பு. ஒளிப்பதிவாளருக்கு பாராட்டுக்கள்.” இவ்வாறு இயக்குனர் சங்கர் பதிவிட்டுள்ளார்.

———

ஜிகர்தண்டா -1 நான் நடித்திருக்க வேண்டிய படம்’ –

என என்றாவது ஒரு நாள் நான் பதிவிடுவேன். காரணம்… ஜிகர்தண்டா -2 !
நான் விமர்சகன் அல்ல.
நிறை குறை சொல்ல!
தெரியாமல் போய்,போன இடத்தில் பிடித்து விட்டால்
அதன் பெயர் பேய்!
இது கார்த்திக் சுப்புராஜ் என்ற பேயை பிடித்து போய் தானே படத்திற்கே போகிறேன்.நினைத்தபடியே மனதை உலுக்கி விட்டது.
நண்பர் Mr larence
நண்பர் mr s j surya
நண்பர் திரு சந்தோஷ் நாராயணன்
நண்பர் திரு திரு
நண்பர் திரு கதிரேசன்
இன்னும் நாயகி உட்பட பலரும்
யானை பலத்துடன் மிரட்டுகிறார்கள்.
மிரட்டும் யானைகளோ நம் கண்களில் நீர் சுரக்க நடிக்கிறார்கள்.
பெரும்பாலான காட்சிகளில் கரைந்தேன்
Jigarthanda -1 நான் நடித்திருக்க வேண்டிய படம்.
முதல் பட அறிமுகத்திற்கு முன்பே நண்பர் திரு கார்த்திக் சுப்புராஜை எனக்கு அறிமுகம் என்பதால் கூடுதல் மகிழ்ச்சி
தியேட்டரில் வெடித்த கைதட்டல்களை தீபாவளி பட்டாசாக ரசித்தேன்.

Related posts