இலங்கை அணியின் தோல்விக்கு சதித்திட்டமே காரணம்!

2023 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரில் இலங்கை அணி எதிர்கொண்ட மிக மோசமான தோல்விகளுக்கான காரணம் குறித்து விசேட அறிவிப்பொன்று வௌியிடப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியுடன் இன்று (10) அதிகாலை நாடு திரும்பிய கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவர் பிரமோத்ய விக்ரமசிங்க இதனை தெரிவித்தார்.

போட்டியில் தோல்வியடைந்ததற்கு அணிக்கு வௌியே இருந்த சதித்திட்டமே காரணம் என அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான அனைத்து தகவல்களும் இன்னும் ஓரிரு நாட்களில் வெளியிடப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

2023 உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை அணி விளையாடிய 9 போட்டிகளில் இரண்டு போட்டிகளில் மாத்திரமே வெற்றிக் கொண்ட நிலையில் 7 போட்டிகளில் படு மோசமாக தோல்வியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts