சனல் 4 காணொளியை அனைத்து இலங்கையர்களும் பார்க்கவேண்டும்

சனல் 4 வெளியிட்டுள்ள உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்த காணொளியை அனைத்து இலங்கையர்களும் பார்க்கவேண்டும் என படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் லசந்த விக்கிரமதுங்கவின் மகள் அகிம்சா தெரிவித்துள்ளார்

டுவிட்டர் பதிவில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த உண்மைகளை அம்பலப்படுத்தும் சனல்4 இன் வீடியோவை பார்த்தபின்னர் ஏற்பட்ட உணர்வுகளை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.

பலவருடங்களாக இந்த தாக்குதலிற்கும் கோட்டாபய ராஜபக்சவிற்கும் தொடர்பிருக்கவேண்டும் என நான் கருதிவந்துள்ளேன்.

இது அனைத்;து இலங்கையர்களும் பார்க்கவேண்டிய மிக முக்கியமான படமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

Related posts