யாழில் 7 நாய்க் குட்டிகள் உயிருடன் எரிப்பு

யாழில் 7 நாய்க் குட்டிகளை உயிருடன் எரித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இச்சம்பவம் யாழ்ப்பாணம் சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நபர் ஒருவர் நாய் ஒன்றினை வளர்த்து வந்துள்ளார். அது சில தினங்களுக்கு முன்னர் 7 குட்டிகளை ஈன்றுள்ளது.

அந்த குட்டிகள் இரவு வேளைகளில் பாலுக்காக கத்தியுள்ளது. அதனால் இரவில் தன்னால் ஒழுங்கான முறையில் உறங்க முடியவில்லை என்பதால், வீட்டில் ஒரு கிடங்கொன்று வெட்டி அதனுள் குப்பைகளை போட்டு தீ மூட்டிய பின்னர், அதனுள் 7 நாய்க்குட்டிகளையும் தீயினுள் போட்டு படுகொலை செய்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபருக்கு தொலைபேசி ஊடாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.

குறித்த முறைப்பாட்டுக்கு அமைய, நாய்க் குட்டிகளை உயிருடன் எரித்து கொன்ற நபருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு சாவகச்சேரி பொலிஸாருக்கு யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் பணித்துள்ளார்.

Related posts