தமிழ் கொடி பங்கேற்ற முக்கிய நிகழ்வு

2048 நிலையான நாடு எனும் திட்டத்தில் வடக்கிலிருந்து பலம் எனும் பெயரில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் குறைகேள் மாநாட்டில் ரியூப் தமிழ் தமிழ் கொடி பணிப்பளர் டிவனியா மற்றும் குழுவினர் கலந்துகொண்டனர்.

கனேடிய நீதி மற்றும் சமத்துவத்திற்கான அமைப்பின் தலைவர் ரோய் சமாதானம் அவர்களின் ஏற்பாட்டில் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஜான்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில்
இன்றைய தினம் முல்லைத்தீவு நகரில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் மாலை 4:00மணிக்கு பல்கலைக்கழக மாணவன் கயன் தலைமையில் நடைபெற்றது.

இதில் பிரதம விருந்தினராக முன்னாள் அமைச்சர், ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளர் பாலித ரங்கேபண்டார முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் யோகராஐன் கனேடிய தமிழ் செயற்பாட்டாளர் ரோய் சமாதானம் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஆறுமுகம் ஜோன்சன் பல்கலைக்கழக மாணவர்கள் கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Related posts