கிழக்கு மாகாணத்திற்கு விரைவில் விமான சேவைகள்!

கிழக்கு மாகாணத்தில் சுற்றுலா மற்றும் முதலீடுகளை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் விமான சேவையை உடனடியாக ஆரம்பிப்பது குறித்து சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுக்கும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு இடையில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

கிழக்கு மாகாணத்தில் காணப்படும் இரண்டு விமான நிலையங்கள் மற்றும் பல விமான இறங்கும் கடல் தளங்கள் பயன்படுத்தப்படாமல் உள்ளமை குறித்து அமைச்சரின் கவனத்துக்கு ஆளுநர் கொண்டுவந்ததையடுத்து இவ்வாறு விமான சேவைகளை ஆரம்பிக்க ஏற்பாடு செய்வதாக அமைச்சர் உறுதியளித்தார்.

இக்கலந்துறையாடலில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர், சிவில் விமான போக்குவரத்து அமைச்சின் செயலாளர் , விமானப் போக்குவரத்து பணிப்பாளர், சுற்றுலா பணியகம், இலங்கை விமானப்படை, Cinnamon Air, Fits Air உள்ளிட்ட தனியார் விமான சேவை நிறுவன பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

இதேவேளை, தனது விமான சேவையை ஜூலை மாதத்திலிருந்து ஆரம்பிக்கவுள்ளதாக, Cinnamon Air தனியார் விமான சேவை நிறுவனம் உறுதியளித்தது. இதனை ஊக்குவிக்க கிழக்கு மாகாண சுற்றுலாப் பணியகம் தனது முழுமையான ஆதரவை வழங்கவுள்ளதாக இதன்போது தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts