சினிமாவில் ராஷ்மிகாவின் அனுபவம்

புதிய சவால்களை எதிர்கொள்ள வேண்டி உள்ளது. இதையெல்லாம் எப்படி சமாளிப்பது என்று அனுபவங்களே பாடம் கற்பித்து விட்டன என ராஷ்மிகா கூறியுள்ளார். தமிழில் கார்த்தியின் சுல்தான் படம் மூலம் அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா.

தொடர்ந்து விஜய் ஜோடியாக வாரிசு படத்தில் நடித்தார். தெலுங்கில் அதிக படங்களில் நடித்து இருக்கிறார். பல மொழிகளில் வெளியான புஷ்பா அவருக்கு திருப்புமுனை படமாக அமைந்தது. இந்தி படங்களிலும் நடிக்கிறார்.

சினிமா அனுபவங்கள் குறித்து ராஷ்மிகா அளித்துள்ள பேட்டியில், “சினிமாவில் நடிக்க வந்த ஆரம்ப நாட்களில் கஷ்டப்பட்டேன். சின்ன சின்ன பிரச்சினைகள் கூட பெரிய கஷ்டங்களாக தோன்றின.

ஆனால் எனது அனுபவங்கள் பிரச்சினைகளை நான் பார்க்கும் கோணத்தையே மாற்றி விட்டன. யோசித்து அடியெடுத்து வைத்தால் ஒவ்வொரு பிரச்சினைக்கும் தீர்வு இருக்கும் என்பதை இப்போது புரிந்து கொண்டு இருக்கிறேன்.

சவால்களை எதிர்கொள்வதை பழக்கமாக்கி கொண்டால் எதுவும் கஷ்டமாக தெரியாது. ஒழுக்கத்தோடு பணி செய்கிறேன். தொடர்ந்து படங்களில் நடிக்கும்போது கொஞ்சம் சோர்வாகத்தான் இருக்கும்.

இப்போது பல மொழிகளில் நடிக்கிறேன். முன்பை விட பிஸியாக நடிக்கிறேன். புதிய சவால்களை எதிர்கொள்ள வேண்டி உள்ளது. இதையெல்லாம் எப்படி சமாளிப்பது என்று அனுபவங்களே பாடம் கற்பித்து விட்டன. நான் சினிமாவுக்கு வந்த புதிதில் இருந்த பிரச்சினைகள் எல்லாம் இப்போது ஒரு பிரச்சினையே அல்ல என்று எனக்கு தோன்றுகிறது” என்றார்.

Related posts