நான் கேட்ட சிறந்த கதைகளில் ஒன்று

ஒரு நாள் கூத்து’, ‘மான்ஸ்டர்’ போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஃபர்ஹானா’. இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும், இந்த படத்தில் இயக்குனர் செல்வராகவன், ஜித்தன் ரமேஷ், கிட்டி, அனுமோல், ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.

‘ஃபர்ஹானா’ திரைப்படம் நேற்று (மே 12) திரையரங்குகளில் வெளியானது. இந்த நிலையில் இந்த படத்தில் நடித்தது குறித்து இயக்குனர் செல்வராகவன் சமூக வலைத்தளத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

அதில், ‘ஃபர்ஹானா’ படத்தை பற்றி என்ன சொல்வது! என்னுடைய வாழ்நாளில் நான் கேட்ட சிறந்த கதைகளில் ஒன்று. இதனை இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் அழகாக மாற்றியுள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ் மேலும் அழகுப்படுத்தியுள்ளார்.

இது போன்ற காவிய படத்தில் நான் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். தயாரிப்பாளர் பிரபு சாருக்கு பாராட்டுக்கள்’ என்று பதிவிட்டுள்ளார்.

Related posts