சமந்தாவுக்கு கோயில் நாளை கும்பாபிஷேகம் : கூத்து

சமந்தாவுக்கு ஆந்திராவில் பெரும் ரசிகர் கூட்டம் உள்ளது. இந்நிலையில், குண்டூர் அருகே உள்ள பாபட்லா மாவட்டம், அலபாடு கிராமத்தை சேர்ந்த தெனாலி சந்தீப் எனும் ரசிகர், சமந்தாவுக்கு கோயில் கட்டி வருகிறார்.

இதன் திறப்பு விழா நாளை நடைபெறுகிறது. இதுகுறித்து சந்தீப் கூறியதாவது:- சம்ந்தா பிரத்யூஷா அறக்கட்டளை மூலம் பல சேவைகளை செய்து வருவதை அறிந்து அவர் மீது மதிப்பு கூடியது.

இதனால் அவருக்கு கோயில் கட்ட தீர்மானித்தேன். இதற்கு எங்கள் வீட்டில் ஒரு பகுதியை ஒதுக்கி கோயில் கட்டி வருகிறேன்.

தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

நாளை திறப்பு விழா நடைபெறுகிறது” என்றார்.

தங்களுக்குப் பிடித்தமான நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கு தென்னகத்தில் உள்ள ரசிகர்கள் நினைவுச் சின்னங்களை எழுப்பும் வழக்கத்தின் ஒரு பகுதியாக குஷ்பு, நயன்தாரா, ஹன்சிகா, நமீதா, ஹனிரோஸ் போன்ற நடிகைகளுக்கு ரசிகர்கள் கோயில் கட்டி உள்ளனர்.

தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் நாளை ஏப் 28 திறப்பு விழா நடத்த உள்ளதாக சந்திப் தெரிவித்தார் தங்களுக்கு பிடித்த நடிகர் நடிகைகளுக்கு கோயில் கட்டி கும்பாபிஷேகம் பாலாபிஷேகம் நடத்துவது உள்ளிட்ட செயல்களில் ரசிகர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

அப்படி தமிழ் சினிமாவில் நடிகை குஷ்புக்கு தான் முதல் முறையாக ரசிகர்கள் கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்தினர் அவரை தொடர்ந்து நடிகைகள் நயன்தாரா, ஹன்சிகா மோத்வானி நமீதா நிதி அகர்வால் மலையாள நடிகை ஹனி ரோஸ் உள்ளிட்ட நடிகைகளுக்கு அவர்களது ரசிகர்கள் கோயில் கட்டி வழிபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் நடிகை சமந்தாவுக்கு அவரது தீவிர ரசிகர் சந்தீப் கோயில் கட்டி உள்ளார் பிரத்யூஷா. அறக்கட்டளையை நடத்தி வரும் நடிகை சமந்தா அதன் மூலம் ஏழ்மை நிலையில் உள்ள குழந்தைகளின் இருதய அறுவை சிகிச்சைகளுக்கு உதவி செய்து வருகிறார்.

குழந்தைகளுக்கு மறு வாழ்வு அளித்து வரும் நடிகை சமந்தாவின் செயல் தன்னை கவர்ந்ததாகவும் அதன் விளைவே இந்த கோயில் என்றும் சந்தீப் கூறுகிறார். இதுவரை ஒரு முறை கூட நடிகை சமந்தாவை நேரில் பார்த்து இருக்காத சந்தீப் அவருக்காக கோயில் கட்டி வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது .

Related posts