பிரியங்கா சோப்ரா அதிரடி கருத்து

உண்மையில் திரையில் பார்ப்பவர்கள் நாங்கள் அறையில் தனியாக இருப்போம் என நினைப்பார்கள் ஆனால் அந்த படப்பிடிப்பு அறையில் 2,000 பேர் இருக்கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியாது.
மும்பை பிரியங்க சோப்ராவின் சூடேற்றும் படுக்கையறை காட்சிகளுடன் உலகளாவிய புலனாய்வு தொடரான சிட்டாடல் வருகிற ஏப்ரல் 28 ந்தேதி முதல் அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது. சிட்டாடல் தொடரில் பிரியங்கா சோப்ரா சக நடிகருடன் படுக்கையறை காட்சிகளில் கவர்ச்சியாக நடித்து உள்ளார்.
சிட்டாடலின் இந்திய பதிப்பில் சமந்தா நடித்து உள்ளார். இது போன்ற காட்சிகளில் அவரும் காணப்படுவார் என கூறப்படுகிறது.
சமந்தா இதற்கு முன்பு குடும்ப மனிதன் 2 படத்திலும் படுக்கையறை காட்சிகளில் நடித்துள்ளா.
இம்முறை அந்த காட்சிகள் அதிகமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
சிட்டாடல் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரியங்கா சோப்ரா. நடிகர் ரிச்சர்ட் மேடனுடனான சூடேற்றும் படுக்கையறை காட்சிகள் குறித்து பிரியங்கா சுவாரசியமான கருத்துக்களை தெரிவித்து உள்ளார்.
அதன் விவரம் வருமாறு:- உண்மையில் திரையில் நாங்கள் அறையில் தனியாக இருப்போம் என நினைப்பார்கள் ஆனால் அந்த படப்பிடிப்பு அரையில் 2,000 பேர் இருக்கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியாது.
சிட்டாடல் தொடரில் படுக்கையறை காட்சிகளில் நடித்துள்ளேன். அந்தக் காட்சிகளின் படப்பிடிப்பின் போது நானும் ரிச்சர்டும் ஒருவருக்கொருவர் உதவி உள்ளோம். சில சங்கடமான கோணங்களில் நடிக்க வேண்டியிருந்தது.
அப்போது நாங்கள் மிகவும் அசவுகரியமாக உணர்ந்தோம்.
நான் அவரிடம் உங்கள் கையை அங்கே வைத்து மறையுங்கள் என்று கூறுவேன். அவர் என்னிடம் உன் கையை இங்கே வை’ என்று கூறுவார். நாங்கள் உடல் உறுப்புகளை கேமராவில் காட்டாதவாறு கைகளால் மூடிக் கொண்டோம்.

Related posts