உள்ளூராட்சி சபை தேர்தல் ஏப்ரல் 25 ஆம் திகதி

உள்ளூராட்சி சபை தேர்தலை ஏப்ரல் 25 ஆம் திகதி நடத்துவதே சிறந்தது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதாக ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

வாக்குச் சீட்டு அச்சிடுதல் மற்றும் வாக்குப்பதிவு தொடர்பான பிற வசதிகள் தொடர்பான எதிர்பாராத மற்றும் தவிர்க்க முடியாத சிக்கல்கள் காரணமாக, மார்ச் 09 ஆம் திகதி தேர்தலை நடத்த முடியவில்லை.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு மார்ச் 28 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் சட்டத்தரணி நிமால் ஜி.புஞ்சிஹேவாவிடம் ´அத தெரண´ வினவியபோது, ​​எதிர்வரும் மார்ச் மாதம் 28, 29, 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் தபால் மூல வாக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

Related posts