திட்டமிட்டபடி இன்று சம்பளம்

அரச ஊழியர்கள் அனைவருக்கும் இம்மாத சம்பளம் திட்டமிட்டபடி இன்று (25) வழங்கப்படுன நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் வழமை போல் நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து ஊழியர்களுக்கும் இன்று வழமை போல் சம்பளம் வழங்கப்படுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் வரி வருமானம் தொடர்பில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஊழியர்களுக்கு இம்மாதச் சம்பளத்தை ஓரிரு தினங்கள் தாமதமாக வழங்க நேரிடுமென ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அரச உத்தியோகத்தர்களுக்கு மாதாந்த சம்பளக் கொடுப்பனவை குறித்த தினத்தில் செலுத்துவதற்கும், நிறைவேற்று பதவிநிலை உத்தியோகத்தர்களின் சம்பளத்தை ஒரு சில தினங்கள் தாமதமாக செலுத்துவதற்கும் கடந்த வாரம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டடத்தில் முடிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts