ரூ.100 கோடி வசூலை நெருங்கும் அஜித்தின் துணிவு

துணிவு படம் முதல் நாளில் பாக்ஸ் ஆபிசில் ஆதிக்கம் செலுத்தியது.2வது நாளில் சராசரி வசூலை பெற்றது. ஆனால் 3 ம் நாள் வசூலில் பாக்ஸ் ஆபிசில் ஆதிக்கம் செலுத்தியது.
சென்னை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடிகர் அஜித்குமார் நடித்த ‘துணிவு’, நடிகர் விஜய் நடித்த ‘வாரிசு’ ஆகிய திரைப்படங்கள் நேற்று வெளியானது. ஒரே நாளில் 2 உச்ச நட்சத்திரங்களின் படங்கள் வெளியானதால் இருவரது ரசிகர்களும் உற்சாகம் அடைந்தனர்.
படம் வெளியான தியேட்டர்கள் முன்பு ரசிகர்கள் கட்-அவுட், பேனர் வைத்தும், கட்-அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்தும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். தமிழ்நாட்டில் உள்ள தியேட்டர்கள், சினிமா வெளியீட்டிற்காக சென்னை, செங்கல்பட்டு, கோவை, மதுரை என மொத்தம் ஒன்பது மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
இவற்றின் கீழ் 1,168 தியேட்டர்கள் உள்ளன.இதில் பொங்கலுக்கு வெளியான வாரிசு, துணிவு படங்களுக்கு சரிசமாக தியேட்டர்கள் ஒதுக்கப்படும் என தமிழ்நாட்டின் முன்னணி திரைப்பட விநியோக நிறுவனமான ரெட் ஜெயண்ட் மூவிஸ் அறிவித்திருந்தது.
இந்த இரண்டு படத்திற்கும் சுமார் 500 திரையரங்கள் வரை ஒதுக்கப்பட்டு இருந்தது.
வாரிசு படம் வெற்றி பெற போகிறதா அல்லது துணிவு படம் வெற்றிபெற போகிறதா என சமூக வலைதளங்களில் ஆங்காங்கே பல சண்டை சச்சரவுகள் நடைபெற்று வந்தது. நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை போன்ற படங்களை தொடர்ந்து எச்.வினோத் இயக்கத்தில் வெளிவந்துள்ள துணிவு படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததோ இல்லையோ நல்ல வசூலை ஈட்டி உள்ளது.
துணிவு படம் முதல் நாளில் பாக்ஸ் ஆபிசில் ஆதிக்கம் செலுத்தியது.2வது நாளில் சராசரி வசூலை பெற்றது. ஆனால் 3 ம் நாள் வசூலில் பாக்ஸ் ஆபிசில் ஆதிக்கம் செலுத்தியது. துணிவு பாக்ஸ் ஆபிஸ் வசூல் தமிழகத்தில் சுமார் ரூ.46 கோடியாக உள்ளது, மேலும் படத்தின் உள்நாட்டில் ரூ.65 முதல் 70 கோடி வரை வசூலாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ‘துணிவு’ திரைப்படம் 3ஆம் நாள் முடிவில் உலகளாவிய பாக்ஸ் ஆபிசில் தோராயமாக ரூ. 93 கோடிகளை ஈட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.

Related posts