நயன்தாரா விவகாரத்தில் கஸ்தூரியை

நடிகை நயன்தாராவும், டைரக்டர் விக்னேஷ் சிவனும் 8 வருடங்களாக காதலித்து கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்ட நிலையில், தற்போது நயன்தாராவுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளதாக விக்னேஷ் சிவன் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு பரபரப்பாகி உள்ளது.

தேனிலவு படப்பிடிப்பு என்று கடந்த சில நாட்களாக தீவிரமாக இருந்த நயன்தாரா கர்ப்பமாக இருந்ததற்கான அறிகுறி எதுவும் இல்லாத நிலையில், குழந்தைகளை எப்படி பெற்றுக்கொண்டார் என்று வலைத்தளத்தில் பலரும் கேள்வி எழுப்பினர்.

இதுகுறித்து நயன்தாரா தரப்பில் தொடர்பு கொண்டு விசாரித்தபோது விளக்கம் தெரிவிக்கவில்லை. வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்று இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற தடை உள்ளதாக நடிகை கஸ்தூரி புதிய சர்ச்சையை கிளப்பி உள்ளார். நயன்தாரா வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுள்ளார் என்ற தகவல் வெளியானதுமே நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில், ”மருத்துவ ரீதியில் தவிர்க்க முடியாத காரணங்களைத் தவிர இந்தியாவில் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் முறை தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த சட்டம் ஜனவரி 2022 முதல் அமலுக்கு வந்தது. அடுத்த சில நாட்களில் இது சம்பந்தமான விஷயங்கள் பற்றி நிறைய கேள்விப்படுவோம்” என்ற பதிவை வெளியிட்டார். இதனால் நயன்தாரா தடையை மீறி குழந்தை பெற்றுக்கொண்டாரா? அல்லது உடல்நல பிரச்சினைகள் உள்ளதா? என்று பரபரப்பாக பேச தொடங்கினர். சிலர் கஸ்தூரி கருத்துக்கு கண்டனம் தெரிவித்தனர்.

இதற்கு பதில் அளித்து கஸ்தூரி வெளியிட்ட இன்னொரு பதிவில், ”வெறுப்பவர்கள் வெறுப்பவர்களாக இருப்பார்கள். உண்மை என்பது உண்மைதான். திருமணமாகி 5 வருடம் ஆகியிருக்க வேண்டும். மலட்டுத்தன்மை நிரூபிக்கப்பட்டு இருக்க வேண்டும்.

பணப்பரிவர்த்தனை கூடாது. வயது விளிம்பு உண்டு” என வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள தேவையான நிபந்தனைகளை பட்டியலிட்டு உள்ளார். நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் பெயரை அவர் குறிப்பிடா விட்டாலும், கஸ்தூரி அவர்களைதான் சொல்கிறார் என ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து தான் வாடகைத் தாய் முறை பற்றிதான் குறிப்பிட்டேன் என்றும் தவறான செய்திகளை பரப்புபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார் கஸ்தூரி.

இந்நிலையில் இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோர் ஆகியுள்ள விக்கி நயன்தாரா தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள வனிதாவின் பதிவை பார்த்த ரசிகர்கள் கஸ்தூரியை மறைமுகமாக தாக்குகிறீர்களா என கேட்டு வருகின்றனர்.

நடிகை வனிதா தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, அன்பான பெற்றோருக்குப் பிறந்த 2 இன்னொசன்ட் குழந்தைகளின் பிறப்பை விட அழகானது என்ன, அவர்களுக்கு எல்லா குழந்தைகளும் பெறத் தகுதியான வாழ்க்கையை வழங்கவும் கொடுக்கவும் முடியும்.

ஒருவரது வாழ்வின் மிக அழகான தருணங்களை கெடுப்பவர்கள்தான் முதலில் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும். சட்டம் தெரியும் மருத்துவம் தெரியும்னு சில மதிப்பு இல்லாத கோமாளிகள் பேட்டி கொடுக்கறதும் டுவீட் போடறதும். திருந்தவேமாட்டங்க.

கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறார், யாருக்கு என்ன கொடுக்க வேண்டும் என்பது அவருக்கு தெரியும். முட்டாள்களாகிய நீங்கள் இதிலிருந்து தப்பிக்கலாம் என நினைக்கிறீர்களா? காத்திருந்து பாருங்கள்.

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஒரு அழகான பெற்றோராக மிகவும் மகிழ்ச்சியான பயணத்தை தொடர நான் வாழ்த்துகிறேன். யார் என்ன சொன்னாலும் நீங்கள் காதில் வாங்காதீர்கள். குழந்தைகளை பெற்றுக்கொள்ளும் மிகச்சிறந்த விஷயத்தை நீங்கள் செய்துள்ளீர்கள். குழந்தைகளுடன் தகுதியான அன்புடனும் அக்கறையுடனும் ஒவ்வொரு கணத்தையும் அனுபவிக்கவும். எல்லாவற்றையும் கடவுள் பார்த்துக்கொள்வார்… கடவுளின் ஆசிர்வாதம்.. என குறிப்பிட்டுள்ளார்.

Related posts