நானும் இந்து அல்ல…! இந்து மதம் வேறு

பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியான பிறகு அந்தப் படம் தொடர்பாகவும் அந்தப் படம் எடுக்கப்பட்ட காலகட்டம் தொடர்பாகவும் அந்த காலகட்ட சம்பவங்கள் தொடர்பாகவும் பல விவாதங்கள் எழுந்திருக்கின்றன.
ராஜராஜ சோழன் இந்து மன்னனா என்ற விவாதம் எழுந்து உள்ளது இந்த் நிலையில் பிரபல டைரக்டர் ராஜமவுலி இந்து மதத்திற்கும் இந்து தர்மத்திற்கும் உள்ள வித்தியாசத்தை எடுத்து கூறி உள்ளார்.
‘நீங்கள் மதத்தை எடுத்துக் கொண்டால், நானும் இந்து அல்ல என கூறி உள்ளார். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சில் நடந்த ஒரு திரைப்பட விழாவில், டைரக்டர் எஸ்.எஸ்.ராஜமவுலி தனது படத்தில் குறிப்பாக ஆர்ஆர்ஆர் படத்தில் இந்து மதத்தின் சித்தரிப்பு குறித்து பேசினார்.
ராஜமவுலி கூறியதாவது:- இந்து மதம் மற்றும் இந்து தர்மம்ஆகியவற்றுக்கு இடையே வித்தியாசம் இருக்கிறது. ஆர்ஆர்ஆர் இந்து நூல்களுடன் தொடர்புடைய பாத்திரங்களை கடன் வாங்குகிறது, குறிப்பாக மையக் கதாபாத்திரங்களை இந்துக் கடவுள்களின் பதிப்புகளாகவும் விளக்கலாம்.
பலர் அது இந்து மதம் என்று நினைக்கிறார்கள், இந்துமதம் தற்போதைய சூழலில் உள்ளது. ஆனால் இந்து மதத்திற்கு முன், இந்து மதம் தர்மம் இருந்தது. இது ஒரு வாழ்க்கை முறை, இது ஒரு தத்துவம். நீங்கள் மதத்தை எடுத்துக் கொண்டால், நானும் இந்து அல்ல, ஆனால் நீங்கள் தர்மத்தை எடுத்துக் கொண்டால், நான் மிகவும் இந்து. படத்தில் நான் சித்தரிப்பது உண்மையில் பல, பல நூற்றாண்டுகள் மற்றும் யுகங்களாக இருக்கும் ஒரு வாழ்க்கை முறையைத்தான். ஆர்ஆர்ஆர் -ல் ராஜு என்ற கதாபாத்திரம் ஒரு ‘துறவி’ உருவமாக மாறும் ஒரு காட்சியை நினைவு கூர்ந்த ராஜமவுலி, ராஜு பகவத் கீதையில் இருந்து ஒரு சமஸ்கிருத வசனத்தை ஓதுகிறார். கிருஷ்ணர் அர்ஜுனனிடம் சொன்ன விஷயமாக இதைப் பார்க்கலாம், எனவே இது ஒரு இந்து மத வசனம், ஆனால் நீங்கள் அதன் பொருளைப் பார்த்தால், ஜாதி மற்றும் எங்கு பிறந்தார் என்பதைப் பொருட்படுத்தாமல் இது இந்தியர்களுக்கு கற்பிக்கப்பட்டுள்ளது. வாழ்க்கையை எப்படிப் பார்ப்பது, நீங்கள் செய்யும் செயலின் பலனைப் பார்ப்பது அல்ல. அதைத்தான் இந்து தர்மம் சொல்கிறது. அதனால், நான் இந்து தர்மத்தைப் பின்பற்றுபவன் என கூறினார்.

Related posts