வட மாகாண ஊடகவியலாளர்களுக்கான கலந்துரையாடல்

சர்வதேச தகவல் உரிமை தினத்தை முன்னிட்டு வெகுசன ஊடக அமைச்சின் ஏற்பாட்டில் இலங்கை தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவினால் வடமாகாணத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

யாழ் மாவட்ட செயலக மாநாட்டு மண்டத்தில் நேற்று (வியாழக்கிழமை) காலை 9.00 மணியளவில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.

தகவல் சட்டத்தை கையாளுகையில் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இந் நிகழ்வில் யாழ் மாவட்ட செயலர் க.மகேசன், தகவலறியும் ஆணைக்குழுவின் தலைவர் உபாலி அபேரத்ன, ஆணையாளர் கிஸாலி பின்ரோ, ஆணையாளர் எஸ்.முகமட் நகியா, ஆணைக்குழுவின் பதில் பணிப்பாளர் நாயகம் எஸ்.ஆர்.டபிள்யூ.எம்.ஆர்.பி. சரத்குமார, சிரேஷ்ட சட்டத்தரணி ஜகத் லியனாராச்சி, தகவல் உரிமை ஆணைக்குழுவின் அதிகாரிகள், வடமாகாணத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

Related posts