இல்லாததை புதிய நடிகர்களிடம் எடுத்துக்கொள்கிறேன்

நடிகர் கமல்ஹாசன் நடித்த விக்ரம் திரைப்படத்தின் 100-வது நாள் கொண்டாட்டம் கோவை ரேஸ்கோர்சில் உள்ள கே.ஜி. தியேட்டரில் நடந்தது.

இதில் நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் தோன்றி பேசினார். அப்போது அவர் கூறியதாவது, சினிமாவில் நான் தொடக்க காலத்தில் 4 படங்கள் நடித்தும் என்னை யாரும் கண்டுகொள்ளவில்லை.

அதை மாற்ற நன்றாக உழைத்தேன். அதனால்தான் இந்த அளவுக்கு உயர்ந்து இருக்கிறேன். ஓ.டி.டி. காலக்கட்டத்தில் தியேட்டர்களை மல்டி பிளக்ஸ்சாக மாற்றியதால் இளைஞர்கள் பலர் வருகிறார்கள்.

இதனால் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஓ.டி.டி. குறித்து முன்கூட்டியே சொன்னேன், இப்போது வந்து இருக்கிறது. அமெரிக்காவில் இருப்பதுபோன்று தியேட்டர்களில் உணவகம் வரப்போகிறது.

புதிதாக வரக்கூடிய நடிகர்களை நான் உற்று கவனித்து வருகிறேன். என்னிடம் இல்லாததை புதிய நடிகர்களிடம் இருந்து எடுத்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related posts