அந்த தீர்வை ஈழத் தமிழினம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது

இலங்கை அரசாங்கத்தின் பித்தலாட்டத்தை சர்வதேசம் புரிந்து கொண்டு இருப்பதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

13 ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தம் தான் இறுதியான அரசியல் தீர்வாக இந்தியா எங்களுக்கு முன்மொழிகின்றதா என அவர் இதன்போது கேள்வி எழுப்பியுள்ளார்.

13 ஆவது அரசியலமைப்பு அடங்கிய அந்த தீர்வை ஈழத் தமிழினம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது என இந்தியாவிடம் கூறிக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts