இயக்குநர் பாரதிராஜா நலமோடு இருக்கிறார்

இயக்குனர் பாரதிராஜா சமீபத்தில் தனுஷுடன் நடித்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் மக்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று வசூல் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.
இந்நிலையில் திடீரென கடந்த 23ஆம் தேதி நீர்சத்து குறைபாடு காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
கடந்த 2 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அவர் தி.நகரில் உள்ள மருத்துவமனையில் இருந்து அமைந்தகரையில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த நிலையில் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இயக்குநர் பாரதிராஜாவை கவிஞர் வைரமுத்து நேரில் இன்று நலம் விசாரித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது ; இயக்குநர் பாரதிராஜா நலமோடு இருக்கிறார். நாளும் நாளும் தேறி வருகிறார். மருத்துவர்கள் நல்ல சிகிச்சையை வழங்கி வருகிறார்கள்.
அச்சப்படுவதற்கு ஆதாரமில்லை, வதந்தி பரப்புவதற்கு வாய்ப்பே இல்லை.
பாரதிராஜா நன்றாக பேசுகிறார். நல்ல நிலையில் இருக்கிறார். அவர் விரைவில் மீண்டு வருவார்” என்று அவர் கூறியுள்ளார்.
இதற்கிடைய, பாரதிராஜா விரைவில் குணமடைய வேண்டி, சினிமா பிரபலங்களும், அவரது நண்பர்களும், தமிழ் ரசிகர்களும் கடவுளிடம் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

Related posts