ஸ்கொட்லாந்து யுவதி மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு

பிரித்தியானிவின் ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி கெய்லி பிரேசர், தன்னை இலங்கையிலிருந்து நாடு கடத்துவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

குறித்த மனுவின் பிரதிவாதிகளாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

காலி முகத்திடலில் அரச எதிர்ப்புப் போராட்டத்துடன் தொடர்புபட்டிருந்ததால், குடிவரவு குடியகல்வு திணைக்களம் தனது விசாவை இரத்து செய்ய தன்னிச்சையான தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் தொடர்பான விபரங்களை சமூக ஊடகங்களில் கெய்லி பிரேசர் வெளியிட்டதால் அவருக்கு வழங்கப்பட்ட வீசாவை ஓகஸ்ட் 15ஆம் திகதி இடைநிறுத்த முடிவு செய்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

அவரை ஓகஸ்ட் 15ஆம் திகதிக்கு முன்னர் இலங்கையை விட்டு வெளியேறுமாறு குடிவரவு குடியகல்வு திணைக்களம் கடிதமொன்றில் தெரிவித்திருந்தது.

எவ்வாறாயினும், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தீர்மானம் அநீதியானது என மேன்முறையீட்டு நீதிமன்றத்தை கெயில் பிரேசர் தனது மனுவின் மூலம் கோரியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts