இந்தி படத்தில் ஷாருக்கானுடன் நடிக்கும் யோகிபாபு

ஷாருக்கானுடன் இணைந்து புதிய இந்தி படத்தில் நடிப்பதை நகைச்சுவை நடிகர் யோகிபாபு உறுதிப்படுத்தி உள்ளார்.

இந்த படத்தை அட்லி இயக்குகிறார். கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு கடந்த வருடம் தொடங்கிய நிலையில் ஷாருக்கான் மகன் போதை பொருள் வழக்கில் சிக்கியதால் நிறுத்தப்பட்டது. படம் கைவிடப்பட்டதாகவும் வதந்தி பரவியது.

இந்த நிலையில் தற்போது படப்பிடிப்பை மீண்டும் தொடங்கி உள்ளனர். இதில் ஷாருக்கான் பங்கேற்று நடித்து வருகிறார். சமீபத்தில் நயன்தாராவும் மும்பை சென்று படப்பிடிப்பில் பங்கேற்றார். இந்த படத்தில் யோகிபாபுவும் நடிப்பதாக தகவல்கள் கசிந்த நிலையில் படக்குழுவினர் உறுதிப்படுத்தாமல் இருந்தனர். இந்த நிலையில் டுவிட்டரில் யோகிபாபுவிடம், ஷாருக்கான் படத்தில் நடிக்கிறீர்களா என்று ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு ஆம் நடிக்கிறேன் என்று யோகிபாபு பதில் அளித்துள்ளார்.

விஜய்யின் 66-வது படத்தில் நடிக்கவும் யோகிபாபுவை ஒப்பந்தம் செய்துள்ளனர். ஏற்கனவே சர்கார், மெர்சல், பிகில், பீஸ்ட் ஆகிய படங்களில் விஜய்யுடன் யோகிபாபு நடித்து இருக்கிறார். தற்போது யோகிபாபு கைவசம் 20-க்கும் மேற்பட்ட படங்கள் உள்ளன. இதில் சில படங்களில் கதாநாயகனாக நடிக்கிறார்.

Related posts