மூன்று பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம்

றம்புக்கணை சம்பவம் தொடர்பில் பொலிஸ் உயர் அதிகாரிகள் சிலர் உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

​பொலிஸ் ஊடக பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, றம்புக்கணை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, றம்புக்கணை பொலிஸ் பிரிவிற்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் கேகாலை பொலிஸ் பிரிவிற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோர் இவ்வாறு இடமாற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

கடந்த 19ஆம் திகதி மாலை றம்புக்கணை பகுதியில் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் முயன்ற போது ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Related posts