துப்பாக்கி முனையில் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை

ராஜஸ்தான் மாநிலம் தோல்பூர் மாவட்டம் கஞ்சன்பூர் கிராமத்தை சேர்ந்த நபர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் நேற்று மாலை தோட்டத்திற்கு சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். காட்டு வழியாக வீடு திரும்பியபோது அவர்கள் 3 பேரையும் அதேகிராமத்தை சேர்ந்த சில ஆண்கள் வழிமறித்தனர்.

மேலும், அந்த கும்பல் அந்த பெண்ணையும், அவரின் கணவரையும் சரமாரியாக தாக்கினர். தாக்குதலை தடுக்க முயற்சித்தபோது அந்த பெண்ணின் கணவரை அந்த கும்பல் தாங்கள் வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கியால் சுட்டனர். இதில், படுகாயமடைந்த அந்த நபர் உதவிகோரி கிராமத்திற்குள் சென்றுள்ளார்.

இதனை தொடர்ந்து அந்த பெண்ணை குழந்தையின் கண்முன்னே அந்த கும்பல் துப்பாக்கி முனையில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து செய்துவிட்டு தப்பியோடிவிட்டனர்.

கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண் நடந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரை தொடர்ந்து துப்பாக்கி முனையில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடிய அதேகிராமத்தை சேர்ந்த லாலு, தன்சிங், விபின், மொகித், சச்சின், லேகேந்திர சிங் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts