நாளை நாடு முழுவதும் 7 1/2 மணி நேர மின்வெட்டு

நாளை தினம் நாடளாவிய ரீதியில் ஏழறை மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக இவ்வாறு மின்வெட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, அனைத்து பகுதிகளிலும் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரையான காலப்பகுதிக்குள் 5 மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
அத்துடன் மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரையான காலப்பகுதிக்குள் இரண்டரை மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts