உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஆணைக்குழு முழு அறிக்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை மற்றும் அது தொடர்பான ஆதாரங்கள் உள்ளிட்ட அனைத்து தொகுதிகளும் பாராளுமன்றத்தில் கையளிக்கப்பட்டுள்ளது.

88 தொகுதிகளைக் கொண்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை இன்று (22) காலை ஜனாதிபதி சட்டப் பணிப்பாளர் நாயகம் ஹரிகுப்த ரோஹணதீரவினால் சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை (பகுதியளவில்) கடந்த 2021 பெப்ரவரி 23ஆம் திகதி சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டிருந்தது. சட்ட ரீதியான காரணங்களுக்காக அது தொடர்பான சாட்சிய பதிவுகள் உள்ளிட்ட ஆதாரங்கள் அல்லது தடயங்கள் எதுவும் இதுவரை வெளியிடப்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் அறியக்கிடைத்த விடயங்களை மக்களுக்கு தெரியப்படுத்தப்பட வேண்டுமென்பதற்காக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்புரையின் பேரில், பாராளுமன்ற உறுப்பினர்களின் மேலதிக பரிசீலனைக்காக அவை தொடர்பான கோப்புகள் பாராளுமன்றத்திற்கு கையளிக்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts