7 சிறுவர்களை ராட்சத அலை இழுத்து சென்றது!

கடலில் எழுந்த ராட்சத அலையில் சிக்கி 7 பேரும் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டனர்.

சென்னை எண்ணூர் அருகே நெட்டுக்குப்பம் பகுதியில் கடலில் குளிக்கச் சென்ற 7 சிறுவர்களை கடல் அலை இழுத்து சென்றது.அதில் ஒரு சிறுவனும் சிறுமியும் சடலமாக மீட்கப்பட்டனர்.இன்னும் ஒரு சிறுவனை காணவில்லை.

சென்னை எண்ணூர் பகுதியை சேர்ந்த டேவிட் என்பவரது குழந்தைகள் மற்றும் அவருடைய உறவுக்கார குழந்தைகள் என மொத்தம் 7 சிறுவர்கள் இன்று மாலை கடலில் குளிக்க சென்றனர். அப்போது கடலில் எழுந்த ராட்சத அலையில் சிக்கி 7 பேரும் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டனர்.

இதனை கண்டு கடலுக்குள் குதித்த டேவிட் 4 பேரை பத்திரமாக மீட்டார். ஆனால், 3 பேரை அலை இழுத்து சென்றது.

உடனடியாக அந்த பகுதி மீனவர்கள் அங்கு வந்தனர். அவர்களும் தேடுதல் பணியில் இறங்கினர். தகவலறிந்து விரைந்து வந்த எண்ணூர் தீயணைப்பு துறையினர் அவர்களுடன் சேர்ந்து மீட்பு மற்றும் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

அதில் 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இன்னும் ஒரு சிறுவனை காணவில்லை.தேடுதல் பணி தொடர்ந்து நடைபெறுகிறது.

மீட்கப்பட்ட உடல்கள் உடற்கூறு ஆய்வு செய்ய சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

Related posts