பாக்ஸ் ஆபிஸ் வசூல் பொய்யான தகவல் – நடிகர் சித்தார்த்

காலங்காலமாக தயாரிப்பாளர்கள் ஏமாற்றி வருகின்றனர் என்று நடிகர் சித்தார்த் தெரிவித்துள்ளார்.

நடிகர் சித்தார்த் சமூக வலைதளங்களில் அடிக்கடி சர்ச்சைக்குரிய விதத்தில் தைரியமாக தனது கருத்துக்களை பதிவிட்டு வரும் நபர். இந்நிலையில் அவர் தனது டுவிட்டரில் புதிய கருத்து ஒன்றை பதிவிட்டு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்.

நடிகர் சித்தார்த், பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்து திரைப்படத் தயாரிப்பாளர்கள் பொய்யான தகவல்களை தெரிவித்து வருகின்றனர். அவர்கள் ஏமாற்றி வருகின்றனர் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, “காலங்காலமாக தயாரிப்பாளர்கள் ஏமாற்றி வருகின்றனர். எல்லா மொழிப் படங்களுக்கும் இதே நிலை தான் உள்ளது.இந்தியா முழுவதும் இந்த நேர்மையற்ற செயல் நடைமுறையில் உள்ளது.”

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Related posts