தியேட்டர்களை திறக்காமலே இருந்திருக்கலாம் – கே.பாக்யராஜ்

வித்யாதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கடைசி காதல் கதை ‘ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமத்தில் நடைபெற்றது.

இந்த விழாவில் பேசிய கே. பாக்யராஜ், திரைக்கு வந்துள்ள சில படங்களை பார்த்தால் தியேட்டர்களை திறக்காமலே இருந்திருக்கலாம் என தோன்றுவதாகவும், இந்த படங்களுக்கு எதிரான பொதுநல வழக்கு தொடர முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இதுபோன்ற ஆபாசமான படங்களை பொது மக்கள் ஆதரிக்க கூடாது என்றும் நீங்கள் ஆதரித்தால் நீங்கள் விரும்புகிறீர்கள் என்று உங்கள் மேல் பழியைப் போட்டு இன்னும் இதே போன்ற பல படங்கள் வெளிவர வாய்ப்பு இருப்பதாகவும் அதனால் மோசமான படங்களை பொதுமக்கள் ஆதரிக்கக் கூடாது என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

சமீபத்தில் வெளியான ஒரு சில படங்கள் ஆபாசத்தின் உச்ச கட்டமாக இருந்ததாக இந்த விழாவில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related posts