விக்ரம்-2 படத்தை வாங்குவதற்கு கடுமையான போட்டி

கமல்ஹாசன் நடித்து வரும் ‘விக்ரம்-2’ படத்தில் அவருடன் விஜய்சேதுபதி, பஹத்பாசில், நரேன், காளிதாஸ் ஜெயராமன், ஷிவானி, காயத்ரி ஆகியோர் நடிக்கிறார்கள். அனிருத் இசையமைக்கிறார். ‘மாஸ்டர்’ படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் டைரக்டு செய்கிறார்.

படப்பிடிப்பில் இருக்கும்போதே இந்தப் படத்தை வாங்குவதற்கு கடுமையான போட்டி உருவாகி இருக்கிறது. இதுவரை இல்லாத அளவுக்கு பெரிய தொகைக்கு வியாபாரம் பேசப் படுகிறது.

இந்தி மொழிமாற்ற உரிமை மட்டும் ரூ.35 கோடிக்கு கேட்கப்படுவதாகவும், தயாரிப்பாளர் தரப்பில் ரூ.50 கோடி சொல்லப்படுவதாகவும் கூறுகிறார்கள்.

——–

கணவரை விட்டு பிரிந்த சமந்தா இப்போது தனிமையில் இருக்கிறார். அவரை ஒரு தெலுங்கு படத்தில், ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடவைக்க பேச்சுவார்த்தை நடந்தது.

இயக்குநர் சுகுமார் தனிப்பட்ட முறையில் வைத்த கோரிக்கையை ஏற்று ஒரு பாடலுக்கு நடனமாட சமந்தா ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

நடிகை சமந்தா புஷ்பாவில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாட இருப்பதாக கூறப்படுகிறது. அதற்கு சமந்தா ரூ.2 கோடி சம்பளம் கேட்டாராம். அவர் கேட்ட ரூ.2 கோடியை கொடுப்பதற்கு படக்குழுவினர் தயாராகி விட்டார்களாம்.

Related posts